ஆண்டிபட்டி:வறட்சியால் ஆண்டிபட்டி பகுதியில் விவசாய தொழிலில் மந்த நிலை நிலவுவதால் விவசாயத்தை நம்பி இருந்த கூலி தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர்.ஆண்டிபட்டி தாலுகாவில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்யப்படும் மானாவாரி நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் உள்ளன. நூற்றுக்கணக்கான ஏக்கரில் இறவை பாசன விவசாயம் நடந்து வருகிறது. கடந்த சில மாதமாக நீடிக்கும் கோடை வெயில், தொடர்ந்து அடிக்கும் காற்றால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
கிணறுகள், போர்வெல்களில் நீர்மட்டம் குறைந்ததால் விவசாய பரப்பும் குறைந்துள்ளது. நடவு, விதைப்பு, மருந்து தெளித்தல், களை எடுத்தல் போன்ற விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியான வேலை வாய்ப்பு இல்லை. மாற்று தொழிலுக்கும் வாய்ப்பில்லாததால், தொழிலாளர்கள் பலரும் கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பிக்கின்றனர். விண்ணப்பித்த அனைவருக்கும் பணி ஒதுக்க முடியாமல் ஊராட்சியினர் திணறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE