விருதுநகர்:விருதுநகர் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உட்பட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் இளைஞர்களின் விளையாட்டுத் துறையான கிரீடா பாரதி சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் 100 கிலோ மீட்டர் டூவீலர் பேரணி இந்தியா முழுவதும் நடக்கிறது.இதை முன்னிட்டு பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் துவக்கி வைக்க, ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் கே.வி.எஸ்., பள்ளி மணிக்கூண்டில் இருந்து சாத்துார் வரை நடக்க இருந்தது.
டி.எஸ்.பி., அர்ச்சனா தலைமையிலான போலீசார் டூவீலர் பேரணிக்கு அனுமதி மறுத்தனர். இதனால் ஆவேசமடைந்த ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தினர் ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உட்பட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் 42 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இதையறிந்த மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சுரேஷ் தலைமையில் கட்சியினர் திருமண மண்டபத்தை முற்றுகையிட்டனர். மதியம் 3:00 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE