கோவை:கோவையில் 'என்னம்மா கண்ணு சவுக்கியமா' எனும் தலைப்பில் நடந்த இன்னிசை நிகழ்ச்சி பார்வையாளர்களை குஷிப்படுத்தியது.நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், மறைந்த பின்னணி பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடந்தது. இதில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தங்கை எஸ்.பி.சைலஜா, மகன் எஸ்.பி.சரண், மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் அனு உள்ளிட்ட, 10 பாடகர்கள் பங்கேற்றனர்.சுமார், 4,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், 'பூங்காற்று திரும்புமா...', 'மலரே மவுனமா...' 'என்னம்மா கண்ணு சவுக்கியா' என, 25க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடப்பட்டன. மவுன ராகம் முரளி குழுவினரின் மெய்மறக்கும் இசை ஒருபுறம், பழமை மாறாதா பாடல்கள் மறுபுறம், பார்வையாளர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE