விருதுநகர்--''பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவதை ஏற்க முடியாது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்,'' என எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறினார்.
விருதுநகரில் அவர் மேலும் கூறியதாவது:குஜராத் தேர்தலுக்காகத் தான் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளனர். 2014ல் இருந்தது போல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டியது பா.ஜ.வின் பொறுப்பு.பா.ஜ., தலைவர் அண்ணாமலை மாநில அரசுக்கு 72 மணி நேர கெடுவிதிப்பது எல்லாம் காமெடி பேச்சு தான். உஜ்வாலா திட்டம் தோல்வி அடைந்து விட்டது.
பலர் சிலிண்டர் விலை கூடியதும் அதனை அப்புறப்படுத்தி விறகு அடுப்பிற்கு மாறி விட்டனர். அந்த பயனாளிகளுக்கு மட்டுமே சிலிண்டர் மானியம் என்பது ஏமாற்று வேலை.பணம் கொடுத்தால் ஆலோசனை வழங்குபவர் தான் பிரசாத் கிேஷார். அவரிடம் ஆலோசனை பெறும் அளவுக்கு காங்கிரஸ் போக வில்லை. பல தேர்தல்களில் வெற்றியும் சிலவற்றில் தோல்வியும் பெற்ற அனுபவம் வாய்ந்த கட்சி தான் காங்கிரஸ்.தமிழர்களுக்கு எதிரான போரின் போது சீமான் சினிமாவில் மும்முரமாக இருந்தார். இப்போது அதை வைத்து அரசியல் செய்கிறார், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE