துமகூரு, :துமகூரில் நடந்த காங்கிரசின் மடிவாளா மாநாட்டில், அக்கட்சியின் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் பங்கேற்காதது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.சட்டசபை தேர்தலுக்கு, காங்கிரஸ் தயாராகி வருகிறது. மாவட்ட வாரியாக, ஜாதி வாரியாக மாநாடுகள் நடத்தி வருகிறது. துமகூரில் நேற்று முன்தினம், 'மடிவாளா' மாநாடு நேற்று நடந்தது. இதில் மாநில காங்., தலைவர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சி அழைப்பிதழில், முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் பெயரும் இருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இவருக்கு சொந்தமான சித்தார்த் மருத்துவ கல்லுாரி அருகிலேயே, மாநாடு நடந்தும் கூட அவர் பங்கேற்காதது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முன் சித்தார்த் கல்லுாரி விருந்தினர் மாளிகையில், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டுக்கு பரமேஸ்வர் வராததால், அங்கு உணவு ஏற்பாட்டை ரத்து செய்துவிட்டு, மூத்த தலைவர் ராஜண்ணா இல்லத்தில், உணவு வசதி செய்ததாக கூறப்படுகிறது.தங்கள் கட்சியில் யாருக்கும் அதிருப்தியில்லை. உட்பூசல் இல்லையென காங்கிரஸ் தலைவர்கள் கூறினாலும், கட்சியில் கோஷ்டி மோதல் இருப்பது, மாநாட்டில் வெளிச்சத்துக்கு வந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE