புதுடில்லி :சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக, ஒரு வழக்கில்ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்டை, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. அதை அவரிடம் போலீசார் கொடுக்க முயன்றபோது, 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சூழ்ந்து, போலீசாரை பணி செய்ய விடாமல்தடுத்துள்ளனர்.இதையடுத்து, அந்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே, வழக்கை விசாரித்த நீதிபதி மீது, அந்த வழக்கறிஞர் பல பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.அந்த வழக்கறிஞருக்கு இரண்டு வாரம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மேலும், ஓராண்டுக்கு நீதிமன்றத்தில் ஆஜராக தடை விதித்தும் இந்தாண்டு மார்ச்சில் தீர்ப்பு வழங்கப்பட்டது.இதை எதிர்த்து அந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பேலா திரிவேதி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:நீதிபதிகள் மீது பொய் புகார்களை கூறுவது தற்போது பேஷனாக மாறியுள்ளது.

இந்த வழக்கில், வழக்கறிஞரின் செயல்பாடுகள் முழுதும் நீதிமன்றத்தை அவமதிப்பதாகவே உள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவானது.நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மும்பையில் நடக்கிறது. உத்தர பிரதேசத்தில் அதிகமாக உள்ளது. தற்போது சென்னையிலும் துவங்கியுள்ளது. பல மாவட்ட நீதிபதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் நிலை உள்ளது.நீதிமன்றத்தையும், நீதியையும், நீதிபதியையும் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. அதனால், உயர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE