மதுரை : இந்தியாவின் 34 விமான நிலையங்களில் துாய்மை பட்டியலில் முதலிடம் பிடித்த மதுரை விமான நிலையத்துக்கு ஆலோசனைக்குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று குழுத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., தலைமையில் நடந்தது. இதில் உறுப்பினர்கள் கலெக்டர் அனீஷ் சேகர், வெங்கடேசன் எம்.பி., போலீஸ் துணை கமிஷனர் தங்கத்துரை, விமான நிலைய அதிகாரி பாபுராஜ், மத்திய தொழிலக பாதுகாப்புப்படை அலுவலர் உமாமகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தற்போது 2 ஷிப்டுகளில் இயங்கும் விமான நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும்.
அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை பார்லிமென்டில் வலியுறுத்துவது. தேவைப்பட்டால் தென்மாவட்ட எம்.பி.,க்கள் விமானத்துறை அமைச்சரை சந்திப்பது, விமான நிலையத்திற்கு கூடுதல் பஸ்வசதி ஏற்படுத்துவது என ஆலோசித்தனர்.இந்தியாவின் 34 சிறிய விமான நிலையங்களில் துாய்மையில் முதல் இடத்தையும், பயணிகள் சேவையில் 4வது இடத்தையும் மதுரை விமான நிலையம் பெற்றுள்ளது. இதனையடுத்து ஆலோசனை குழு உறுப்பினர்கள் விமான நிலைய அதிகாரிகளை பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE