கவுகாத்தி, : அசாமில், கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை, 25 ஆக அதிகரித்துள்ளது.வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக, 22 மாவட்டங்களில், 7.20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மிக மோசமாக நாகோன் மாவட்டத்தில் மட்டும், 3.50 லட்சம் பேர் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.மாநிலத்தில், 1,709 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 82 ஆயிரம் ஹெக்டரில் பயிர்கள் நாசமாகியுள்ளன.

எட்டு மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில், 19 ஆயிரம் குழந்தைகள் உட்பட, 91 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பல இடங்களில், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்து உள்ளன. மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 25 ஆக உயர்ந்துள்ளது. பிரம்மபுத்ரா நதியின் கிளை நதிகளான கோப்பிலி, காம்பூர் ஆகியவற்றில், வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE