வால்பாறை : வால்பாறை நகரில், 3.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.வால்பாறை காமராஜ் நகரில் உள்ள, ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் கற்பகம் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, தாஸ், 50, என்பவர் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, 3.5 கிலோ கஞ்சாவை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.