திருப்பூர் : வரத்து உயர துவங்கியுள்ளதால், நுாறு ரூபாயை கடந்திருந்த தக்காளி விலை சற்று குறைய துவங்கியுள்ளது.நேற்று, உழவர் சந்தையில், மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி, 75 ரூபாய்க்கு விற்கப்பட்டது. காலநிலை மாற்றம், அவ்வப்போது பெய்த மழை காரணமாக சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது.தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கான வெளிமாநில தக்காளி வரத்தும் ஒரே நேரத்தில்குறைந்ததால், திருப்பூரில் தக்காளி விலைகிடுகிடுவென உயர்ந்து, கிலோ, நுாறு ரூபாயை தொட்டது.இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழை இல்லை. வெயில் சுளீரென அடிக்கிறது. இதனால், நடப்பு வாரம் துவங்கியது முதல் தக்காளி வரத்து
மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. தெற்கு உழவர் சந்தைக்கு, 300 முதல், 650 கிலோ தக்காளி கூடுதலாக வருகிறது.மைசூரில் இருந்து லாரிகளில் தென்னம்பாளையத்துக்கும் தக்காளி வர துவங்கியுள்ளது. இதனால், திருப்பூரில் தக்காளி விலை மெல்ல குறைய துவங்கியுள்ளது.நேற்று, தெற்கு உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி (மொத்த விலையில்) 75 ரூபாய்க்கு விற்றது. சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து குறைந்து கிலோ, 15 ரூபாய். பெரிய வெங்காயம், 18 ரூபாய். வரத்து அதிகரிப்பதால், பச்சைமிளகாய் விலை குறைந்து, கிலோ, 20 ரூபாய். தக்காளி விலை உயர்வால், கடந்த வாரம் காய்கறி விலை உயர்ந்திருந்தது.தக்காளி விலை குறைய துவங்கியதையடுத்து காய்கறிகளின் விலையும் குறைய துவங்கியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE