புதுடில்லி,-தென்மேற்கு பருவமழை கேரளாவில், வழக்கமாக ஜூன் 1ம் தேதியில் இருந்து துவங்கும். அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் வழக்கத்தைவிட முன்னதாக, இம்மாதம், 16ம் தேதியே பருவ மழை துவங்கியது.
அசானி புயல் உருவானதால், இந்தாண்டு பருவ மழை கேரளாவில் முன்னதாகவே துவங்கும் என்று கணிக்கப்பட்டது.ஆனால் கடந்த ஆறு நாட்களாக எவ்வித சலனமும் இல்லை.இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுஉள்ளதாவது:தெற்கு அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பருவ மழை மீண்டும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகிஉள்ளது.
தெற்கு அரபிக் கடலில் சில பகுதிகள், மாலத் தீவுகள், லட்சத்தீவுகளில் இது பரவி வருகிறது.இலங்கையை நெருங்கியுள்ள பருவ மழையால் அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களில், கேரளாவை நோக்கி முன்னேறி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE