வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,-பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக், தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் பிரிவினைவாத தலைவ ரான யாசின் மாலிக் உள்ளிட்டோர் மீது, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த இந்த வழக்கை விசாரித்த டில்லி சிறப்பு நீதிமன்றம், யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது.
ஏற்கனவே அவர் டில்லி திஹார் சிறை வளாகத்தில், ஏழாம் எண் பிரிவில் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அதிக பாதுகாப்புள்ள அந்த தனிமைச் சிறையிலேயே அவர் தொடர்ந்து அடைக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு எவ்வித பணிகளும் வழங்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.பயங்கரவாத வழக்கில் அடைக்கப்பட்டுள்ளதால், 'பரோல்' போன்ற சலுகைகளும் அவருக்கு கிடைக்காது என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![]()
|
யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டதை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள், ஜம்மு - காஷ்மீரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிலர், போலீசார் மீது கற்களை வீசினர்.இது தொடர்பாக, 10 பேரை ஜம்மு - காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE