வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நீட் தேர்வுக்கு அதிகளவு விண்ணப்பித்து முதல்வருக்கு தமிழக மாணவர்கள் பதிலளித்துள்ளனர் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மருத்துவ படிப்புகளில் முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான 'நீட்' தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இந்த ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு, ஜூலை 17ல் நாடு முழுதும் நடக்கிறது. இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 6ல் துவங்கி, மே 20ல் முடிந்தது. 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, தமிழகத்தில் 1.42 லட்சமாக உயர்ந்துள்ளது; கடந்த ஆண்டை விட, 32 ஆயிரம் பேர் அதிகம். ஆண்டுக்கு ஆண்டு, 'நீட்' தேர்வு எழுத விரும்பும் மாணவ - மாணவியர் அதிகரித்து வருகின்றனர்.

இந்த செய்தியை மேற்கோள் காட்டி, அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வுக்கு அதிகளவு விண்ணப்பித்து, முதல்வரின் தேர்வு குறித்த கோரிக்கைக்கு தமிழக மாணவர்கள் பதிலளித்துள்ளனர். தி.மு.க., அரசு நடத்தும் அற்ப அரசியலுக்கு தமிழக மாணவர்களிடம் நேரமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE