இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் மாதவன் என, தமிழக திரைப்படத் துறையினர் சிலர் பிரதமர் மோடியைப் பாராட்டி வருகின்றனர். ஆனால் ஒரு நடிகரின் மகனை டில்லி பா.ஜ., தலைவர்கள் பாராட்டுவதோடு, அவரிடம் தொலைபேசியில் பேசி நன்றி தெரிவித்து வருகின்றனர்.அவர் மறைந்த நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார்.
இவர் சென்ற வருடம் பா.ஜ.,வில் சேர்ந்தார். இவர் டில்லியில் உள்ள சீனியர் பா.ஜ., தலைவர்களுக்கு தமிழக அரசியல், கலாசாரம், பண்பாடு என பல விஷயங்களை சுருக்கமாக ஆங்கிலத்தில் 'நோட்' போட்டு ரெகுலராக அனுப்பி வருகிறார்.சமீபத்தில் தமிழகத்தில் பிரச்னையை ஏற்படுத்திய தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேசம் குறித்து விபரமான நோட் அனுப்பியுள்ளார் ராம்குமார்.
இந்தியாவின் புராதன வாரணாசி விஸ்வநாதர் கோவிலை 1,௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பு நாகா சாதுக்கள் எப்படி பாதுகாத்து வந்தனர் என ஆராய்ச்சி செய்து, இது தொடர்பான விபரங்களையும் டில்லி பா.ஜ., தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார் ராம்குமார். இதைப் படித்த அவர்கள் ராம்குமாரை பாராட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE