பினாமி பெயரில் சொத்து பதிவு அதிகரிப்பு?

Updated : ஜூன் 01, 2022 | Added : ஜூன் 01, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை : அடுக்குமாடி கட்டுமான திட்ட அனுமதி கோரி, தனி நபர்கள் பெயரில் தாக்கலாகும் விண்ணப்பங்கள் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.தமிழகத்தில் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., - சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், புதிய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப் படுகின்றன. சிறிய அளவிலான திட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல்
பினாமி பெயர் ,சொத்து பதிவு அதிகரிப்பு?


சென்னை : அடுக்குமாடி கட்டுமான திட்ட அனுமதி கோரி, தனி நபர்கள் பெயரில் தாக்கலாகும் விண்ணப்பங்கள் மீது, அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., - சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், புதிய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப் படுகின்றன. சிறிய அளவிலான திட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல் வழங்குகின்றன.

பொது கட்டட விதிகளின்படி, பொறியாளர்கள் உள்ளிட்ட தொழில்முறை வல்லுனர்கள், கட்டுமான திட்ட மேம்பாட்டாளர்கள் பதிவும் கட்டாயம்.



latest tamil news


இதில், சிறிய அளவிலான கட்டுமான திட்டங்களுக்கு, பெரும்பாலும் தனி நபர்கள் பெயரில் விண்ணப்பங்கள் வருவது வழக்கம். அதிக எண்ணிக்கையிலான வீடுகள், கடைகள், மனைகள் உள்ள திட்டங்களுக்கு, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் வாயிலாகவே விண்ணப்பங்கள் வரும்.
நிறுவனங்கள் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் விண்ணப்பங்களில் கையெழுத்திடுவர். ஆனால், சமீப காலமாக, பல பெரிய கட்டுமான திட்டங்களுக்கு, தனி நபர்கள் பெயரில் விண்ணப்பங்கள் வருகின்றன.
நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:

பெரிய அளவிலான கட்டுமான திட்டங்கள், பெரும்பாலும் தனியார் பெயரில் மேற்கொள்ளப்படுவது இல்லை. இது போன்ற திட்டங்கள் கம்பெனிகள் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக தான் மேற்கொள்ளப்படும்.
அந்நிறுவனங்களின் திட்டங்கள், அதன் பண பரிமாற்றம், வருவாய் ஆகியவை, வரி விதிப்பு நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படும். ஆனால், தற்போது தனி நபர்கள் பெயரில் தாக்கலாகும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., புள்ளி விபரங்கள் அடிப்படையில், 10 திட்டங்களில் ஐந்து திட்டங்களுக்கு தனி நபர் பெயரில் விண்ணப்பம் வருகிறது.
இது போன்ற விண்ணப்பங்களின் பின்னணி குறித்து, அதிகாரிகள் ரகசியமாக விசாரிக்க துவங்கி உள்ளனர். இதன் பின்னணியில் பினாமிகள் உள்ளனரா, வரி ஏய்ப்பு நடக்கிறதா என விசாரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

Cheran Perumal - Radhapuram,இந்தியா
01-ஜூன்-202215:33:14 IST Report Abuse
Cheran Perumal திமுக ஆட்சியில் தமிழகம் முன்னேறுகிறது.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
01-ஜூன்-202215:16:06 IST Report Abuse
r.sundaram கண்டிப்பாக கழக கண்மணிகள் பித்தலாட்டம் இது. இதர்க்கெலாம் அனுமதி தர சொல்லி மேலிடத்திலிருந்து அழுத்தமும் வரும். பார்ப்போம், என்ன நடக்கிறது என்று.
Rate this:
Cancel
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
01-ஜூன்-202214:34:33 IST Report Abuse
Dinesh Pandian எதிர் கட்சி ஆட்கள் தான் பினாமியாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X