ராகுலிடம் 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

Updated : ஜூன் 15, 2022 | Added : ஜூன் 15, 2022 | கருத்துகள் (42) | |
Advertisement
புதுடில்லி: 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வாங்கியதில் நடந்த மோசடி குறித்து, காங்கிரஸ் எம்.பி.,யிடம் 3வது நாளாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை விலைக்கு வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, சோனியா, ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம்
ராகுலிடம் 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை வாங்கியதில் நடந்த மோசடி குறித்து, காங்கிரஸ் எம்.பி.,யிடம் 3வது நாளாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.



நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையை விலைக்கு வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, சோனியா, ராகுலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் புதுடில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் ஆஜரானார். அவரிடம், 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடந்தது.


latest tamil news


இரண்டாவது நாளாக நேற்றும் ராகுலிடம் விசாரணை நடந்தது. காலை 11:05 மணிக்கு வந்த அவரிடம் தொடர்ந்து நான்கு மணி நேரம் விசாரணை நடந்தது. மதிய உணவு இடைவேளைக்குப் பின், ஆறு மணி நேரம் என, நேற்று மொத்தம், 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் வாங்கியது தொடர்பாக, ராகுலிடம் அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டனர்.



இதையடுத்து, இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி, ராகுலுக்கு உத்தரவிடப்பட்டது. 3வது நாளாக ராகுலும் நேரில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சோனியா ஜூன் 23ல் ஆஜராக உள்ளார்.



போராட்டம்



latest tamil news

ராகுலிடம் விசாரணை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.



latest tamil news

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (42)

jayvee - chennai,இந்தியா
17-ஜூன்-202214:48:44 IST Report Abuse
jayvee இந்த தம்பி வினாத்தாளை லீக் செய்தாலே பாஸ் ஆகமாட்டார் .. இவரிடம் மூன்றாவது நாளாக விசாரணை..கைய பிடிச்சு இழுத்தயா ? என்ன கைய பிடிச்சு இழுதையா? இப்படித்தான் மூன்று நாட்களும் போகும்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஜூன்-202200:37:29 IST Report Abuse
M  Ramachandran ஒரு தனிப்பட்ட குடும்பம் செய்த பித்தலாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை ஏன் போர் ராட்டத்தில் குதிக்க வேண்டும். இது அறிவுடைய செயலாக தெரிய வில்லை.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஜூன்-202200:35:42 IST Report Abuse
M  Ramachandran ராகு கேது மற்றும் சனி பார்வையை சரியில்லைய. குடும்பத்தயே ஆட்டுது. இந்த வினை செய்யும் போதும் யாதென நிலைய இருந்திருக்கும் சிதம்பரம் பொஆன்றவர்கள் அறிவுப்பு கொடுத்திருக்கலாம். இன்னும் வேரே சீனா டீலிங் வேரே எப்போலா தலை தூக்க போகிறதோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X