கம்பி வேலியில் சிக்கிபுள்ளி மான் பலி
கம்பி வேலியில் சிக்கிபுள்ளி மான் பலி

கம்பி வேலியில் சிக்கிபுள்ளி மான் பலி

Added : ஜூன் 15, 2022 | |
Advertisement
மரக்காணம்,-மரக்காணம் அருகே விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த கம்பி வேலியில் சிக்கி புள்ளி மான் இறந்தது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவருக்கு அதே பகுதியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்தைச் சுற்றிலும் இரும்பு கம்பி வேலி அமைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு வழி தவறி, கிராமத்திற்குள் வந்த ஆண் புள்ளி மானை

மரக்காணம்,-மரக்காணம் அருகே விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த கம்பி வேலியில் சிக்கி புள்ளி மான் இறந்தது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த சாத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவருக்கு அதே பகுதியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்தைச் சுற்றிலும் இரும்பு கம்பி வேலி அமைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு வழி தவறி, கிராமத்திற்குள் வந்த ஆண் புள்ளி மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் துரத்தியுள்ளன. நாய்களிடமிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்த மான், சுந்தர் என்பவர் நிலத்தில் உள்ள இரும்பு கம்பி வேலியில் சிக்கி, கழுத்தில் கம்பிகள் குத்தியதில் அதே இடத்திலேயே இறந்தது.நேற்று காலை, வனத்துறையினர் இறந்த புள்ளிமானை உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X