வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீ மேன் சாமர்த்தியத்தால் சென்னை- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது. பயணிகள் பலர் தப்பினர். ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ரயில்நிலையம் உள்ளது. இதன் அருகில் காலை தண்டவாளம் துண்டாக உடைந்திருந்தது.

வழக்கமாக ரயில்பாதையை ஆய்வு செய்யும் எட்டாவது கேங் கீமேன் ராமநாதபுரத்தை சேர்ந்த வீரபெருமாள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
காலை 6.40மணிக்கு ராமநாதபுரம் வந்த சென்னை - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் 6.55க்கு வாலாந்தரவை வந்தடைய இருந்தது.
தண்டவாளம் உடைந்த நிலையில் ரயில் தூரத்தில் வருவதை பார்த்த கீமேன் வீரபெருமான சிவப்பு கொடியை காட்டியபடி தண்டவாளத்தில் சுமார் 200 மீ ஓடி ரயிலை நிறுத்த சொன்னார்.
ரயில் நிறுத்தப்பட்டு இன்ஜின் பகுதி மட்டும் உடைந்த பகுதியை கடந்து நின்றது.

இதனால் ரயில்தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. ரயில் விபத்தை தடுத்த கீமேன் வீரப்பெருமாளை வாலாந்தரவை கிராம மக்கள் பாராட்டினர்.
அதன்பின் உடைந்த பகுதியில் புஷ் பிளேட் பொருத்தி இணைக்கப்பட்டு ஒரு மணிநேரம் தாமதமாக ரயில் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்றது.