சிரபுஞ்சியில் கொட்டித் தீர்த்த அதி கன மழை: ஒரே நாளில் 97.2 செ.மீ., ஆக பதிவு

Updated : ஜூன் 18, 2022 | Added : ஜூன் 18, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி-மேகாலயாவின் சிரபுஞ்சியில் ஒரே நாளில், 97.2 செ.மீ., மழை பொழிந்தது. கடந்த 122 ஆண்டுகளில் மூன்றாவது அதிக மழைப்பொழிவாக இது பதிவாகி உள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, உலகின் அதிக மழைப்பொழிவு உள்ள நகரமான சிரபுஞ்சி உள்ளது. எப்போதும் மழை பொழிந்து வரும் இந்த இடத்தில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி-மேகாலயாவின் சிரபுஞ்சியில் ஒரே நாளில், 97.2 செ.மீ., மழை பொழிந்தது. கடந்த 122 ஆண்டுகளில் மூன்றாவது அதிக மழைப்பொழிவாக இது பதிவாகி உள்ளது.



latest tamil news


வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, உலகின் அதிக மழைப்பொழிவு உள்ள நகரமான சிரபுஞ்சி உள்ளது. எப்போதும் மழை பொழிந்து வரும் இந்த இடத்தில் இம்மாதம் அதிக மழைப் பொழிவு பதிவானது.

இது குறித்து அசாமின் கவுஹாத்தியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:சிரபுஞ்சியில் ஆண்டு தோறும் 50 முதல் 60 செ.மீ., மழைப் பொழிவு ஒன்று அல்லது இரு முறை நிகழும். 80 செ.மீ.,க்கு அதிகமான மழை வழக்கத்துக்கு மாறானது. இந்த ஜூன் மாதத்தில் மட்டும் 80 செ.மீ.,க்கும் அதிகமான மழை பொழிவு ஒனப்து முறை பதிவாகி உள்ளது.


latest tamil news



கடந்த 15ம் தேதி, சிரபுஞ்சியின் கிழக்கு காசி மலைப்பகுதியில் 24 மணி நேரத்தில் 81 செ.மீ., மழை பொழிந்தது. மீண்டும் நேற்று முன் தினம் காலை துவங்கிய மழை, நேற்று காலை 8:30 மணி வரை தொடர்ந்தது. இதில், 97.2 செ.மீ., மழை பதிவானது. கடந்த 1995க்கு பிறகான மழைப் பொழிவில் இது அதிகம். கடந்த 122 ஆண்டுகளில் மூன்றாவது அதிக மழைப் பொழிவாக இது பதிவாகி உள்ளது.

ஜூன் மாதம் துவங்கியதில் இருந்து நேற்று வரை, சிரபுஞ்சியில், 408 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

Tamilan - NA,இந்தியா
18-ஜூன்-202211:36:21 IST Report Abuse
Tamilan மழை பெய்வதற்கும் ஆட்சி செய்பவர்களுக்கும் என்ன சம்பந்தம் . இந்தியாவில் இருக்கும் ஒரு இடத்தில் என்றால் போதாதா ?.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
18-ஜூன்-202209:04:58 IST Report Abuse
M S RAGHUNATHAN இதற்கு இங்கு உள்ள இஸ்லாமியர்களும், சிறுபான்மை இன பாதுகாவலர்கள், திருமா, மனுஷ்ய புத்திரன், இஸ்லாமிய பெண்கள் உரிமை பற்றி என்ன சொல்லப் போகிறார்கள். பேச மாட்டார்கள். ஏனென்றால். உயிர் பயம் அவர்களுக்கு. இதற்கு வாய் திறவாமல் இருப்பவர்கள், ஏதோ ஒரு நாட்டில் எவனோ ஒருவன் ஒரு கார்ட்டூன் போட்டான் என்று இங்கு கூச்சல் போட்டு, பஸ்களை நொறுக்கியது எப்படி நியாயம். இவர்களை உடனே ஆப்கனிஸ்தான் அனுப்பி அங்கு இஸ்லாமிய சகோதரிகளுக்கு ஆதரவாக போராட சொல்லவும். கோழைகள்.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
18-ஜூன்-202208:58:54 IST Report Abuse
M S RAGHUNATHAN நம்ம ஊரில் உள்ள அமைதி மார்கத்தினரும், அவர்களுக்கு முட்டு கொடுக்கும் போலி மத saarpatravarkalukkum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X