'ஹிஜாப்' அணியாத பெண்கள் மிருகம்; ஆப்கனில் 'போஸ்டர்' ஒட்டிய தலிபான்கள்

Updated : ஜூன் 18, 2022 | Added : ஜூன் 18, 2022 | கருத்துகள் (22) | |
Advertisement
காபூல்,-'ஹிஜாப் அணியாத பெண்கள், மிருகங்களைப் போல தோற்றமளிக்க முயற்சிக்கின்றனர்' என எழுதப்பட்ட 'போஸ்டர்'களை, தலிபான்கள் ஆப்கனில் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆட்சியை கைப்பற்றினர். அடக்குமுறை கடந்த 1996 - 2001 ஆட்சியின் போது பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கடுமையான

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காபூல்,-'ஹிஜாப் அணியாத பெண்கள், மிருகங்களைப் போல தோற்றமளிக்க முயற்சிக்கின்றனர்' என எழுதப்பட்ட 'போஸ்டர்'களை, தலிபான்கள் ஆப்கனில் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள், கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஆட்சியை கைப்பற்றினர்.



latest tamil news



அடக்குமுறை



கடந்த 1996 - 2001 ஆட்சியின் போது பெண்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது தொடராது என, தலிபான்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனாலும் அவர்களின் அடக்குமுறைகள் தொடர்ந்தன.

இந்நிலையில், தெற்கு ஆப்கனில் உள்ள காந்தகார் நகர் முழுதும், தலிபான்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், 'ஹிஜாபை, பெண்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் அணிய வேண்டும். அப்படி அணியாத பெண்கள், மிருகங்களைப் போல தோற்றமளிக்க முயல்கின்றனர்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.


latest tamil news



விளம்பர பலகை



ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், 'மால்'கள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. 'குட்டையான, இறுக்கமான, மெல்லிய ஆடைகள் அணிவது தலிபான் கொள்கைகளுக்கு எதிரானது' என, அந்த சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, அமைச்சக அதிகாரி அப்துல் ரஹ்மான் தயேபி கூறியதாவது:முகத்தை மறைக்காமல் பொது இடங்களுக்கு வரும் பெண்களுக்காகவே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. உத்தரவை மதிக்காத பெண்களின் வீட்டில் உள்ள ஆண்கள், அரசு வேலையில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (22)

Kumar - Madurai,இந்தியா
18-ஜூன்-202214:19:36 IST Report Abuse
Kumar மூர்க்கர்களின் பேச்சு, செயல் மட்டும் மோசமானது இல்லை. அவர்கள் பார்வையும் மோசமானது என்று தான் அவரே புர்கா போடச்சொல்லி இருக்கார் போல. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
18-ஜூன்-202214:10:12 IST Report Abuse
வீரா முஸ்லீம் பெண்கள் அனைவரும் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்று பிஜேபி சட்டம் கொண்டு வந்தால் மொத்த இந்தியாவிலும் ஹிஜாப் பழக்கம் முற்றிலும் கைவிட படும். ரகளை பண்ண மட்டுமே பள்ளி வகுப்புகளில் ஹிஜாப் முறை புதிதாக கிளப்பப்படுகிறது.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
18-ஜூன்-202212:12:33 IST Report Abuse
raja இவனுவோதான் பெண்களுக்கு சம உரிமை கொடுக்குது அமைதி மார்க்கமுன்னு பேசுறவனுவோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X