நடுவானில் தீ: பாட்னாவில் பத்திரமாக தரையிறங்கிய விமானம்

Updated : ஜூன் 19, 2022 | Added : ஜூன் 19, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பாட்னா: டில்லிக்கு கிளம்பிய ஸ்பெஸ் ஜெட் விமானத்தில், இன்ஜீனில் தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் பாட்னாவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.ஸ்பெஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, 185 பேருடன் பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து டில்லிக்கு கிளம்பியது. சிறிது நேரத்தில் இடது பக்க இன்ஜீனில் தீ பிடித்தது. இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக பாட்னாவில்
Delhi, SpiceJet, Flight, Engine , Fire,  Patna

பாட்னா: டில்லிக்கு கிளம்பிய ஸ்பெஸ் ஜெட் விமானத்தில், இன்ஜீனில் தீவிபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் பாட்னாவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

ஸ்பெஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, 185 பேருடன் பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து டில்லிக்கு கிளம்பியது. சிறிது நேரத்தில் இடது பக்க இன்ஜீனில் தீ பிடித்தது. இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக பாட்னாவில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



latest tamil news



இது தொடர்பாக பாட்னா மாவட்ட கலெக்டர் கூறுகையில், டில்லி சென்ற விமானத்தில் இன்ஜீனில் தீபிடித்ததால், பாட்னாவுக்கு மீண்டும் திரும்பியது. இன்ஜீனில் ஏற்பட்ட தீயை உள்ளூர் மக்கள் பார்த்து, விமான நிலைய அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விமானத்தில் இருந்த 185 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-202203:38:18 IST Report Abuse
மலரின் மகள் இந்த நிறுவனம் பெரும் நிதி சிக்கலில் உள்ளது என்று கேள்விப் படுகிறோம். பராமரிப்பிற்கு அக்கறை காட்டுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதை எங்களை பொறுத்தவரையில் தவிர்க்கவே செய்திருக்கிறோம். என்றோ எப்போதோ இந்த விமானத்தில் பறப்பதை நிறுத்தியாகிவிட்டது. கிங்பிஷர் மற்றும் ஜெட்டைர்வேஸ் போன்று வேறு நல்ல சேவை நிறுவனங்களை அரசு ஊக்குவிக்கவேண்டும். பாராமென்ட் ஐர்வய்ஸ் மிகவும் சிறப்பாக பயணியர் சேவையையும் பைவ் கோர்ஸ் உணவுகளையும் கொடுத்து வெளிநாட்டு விமானங்களை விட சிறப்பாக சில மாதங்கள் மட்டுமே பறந்து தரைதட்டிவிட்டது.
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
19-ஜூன்-202217:56:01 IST Report Abuse
Narasimhan விமானத்தையும் விட வில்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X