வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஒற்றை தலைமை விவகாரத்தில் நான் ஓ.பன்னீர்செல்வம் பக்கமும் இல்லை, எடப்பாடி பழனிசாமி பக்கமும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த அதிமுக மாவட்ட செயலர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். அதன்பின், அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடிக்க துவங்கியது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒருபக்கம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒருபக்கம் என மாறி மாறி தங்களின் நிலையை வலுப்படுத்தி வருகின்றனர்.
ஜெயக்குமார் வெளிப்படையாக கூறியதால் தான் பிரச்னை ஆரம்பமானதாக ஓபிஎஸ் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்நிலையில், வரும் ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அக்கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், ஓபிஎஸ் - இபிஎஸ் இடையேயானபனிப்போர் அதிகரித்துள்ளது. இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்ட நிகழ்வும் அரங்கேறி இருந்தது. இதன் காரணமாக பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் நிருபர்களை இன்று (ஜூன் 20) சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது: நான் ஒற்றை தலைமை என்று மட்டுமே சொன்னேன், யார் என்று சொல்லவில்லை. இதுப்பற்றி கூறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஒற்றை தலைமை விஷயத்தில் சுமூக முடிவு எட்டப்படும். நான் பன்னீர்செல்வம் பக்கமும் இல்லை, எடப்பாடி பழனிசாமி பக்கமும் இல்லை. அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். ஒற்றை தலைமை குறித்து பொதுக்குழுவே முடிவு எடுக்கும். அதிமுக.,வில் பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் இல்லை. சசிகலாவுக்கும் அதிமுக.,வுக்கும் சம்பந்தம் இல்லை, அவரை போல ஓபிஎஸ்.,க்கும் நடக்கும் என கூறுவது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE