வெட்ட வந்த ரவுடியை மடக்கிய எஸ்.ஐ.,: 'நிஜ ஹீரோ' என குவியும் பாராட்டு

Added : ஜூன் 21, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
ஆலப்புழா : கேரளாவில், திடீரென அரிவாளால் வெட்ட வந்த ரவுடியை சாதுர்யமாக மடக்கிப் பிடித்து கைது செய்த எஸ்.ஐ.,யின் வீர செயலை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். கேரளாவில், ஆலப்புழா மாவட்டத்தின் காயங்குளம் அருகே, 'பாரா ஜங்ஷன்' என்ற இடம் உள்ளது. இப்பகுதியின் போலீஸ் ஸ்டேசனை சேர்ந்த எஸ்.ஐ., அருண்குமார், 12ம் தேதியன்று ஜீப்பில் ரோந்து பணி சென்றார். அப்போது இரு சக்கர
வெட்ட வந்த ரவுடியை மடக்கிய எஸ்.ஐ.,: 'நிஜ ஹீரோ' என குவியும் பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஆலப்புழா : கேரளாவில், திடீரென அரிவாளால் வெட்ட வந்த ரவுடியை சாதுர்யமாக மடக்கிப் பிடித்து கைது செய்த எஸ்.ஐ.,யின் வீர செயலை, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

கேரளாவில், ஆலப்புழா மாவட்டத்தின் காயங்குளம் அருகே, 'பாரா ஜங்ஷன்' என்ற இடம் உள்ளது. இப்பகுதியின் போலீஸ் ஸ்டேசனை சேர்ந்த எஸ்.ஐ., அருண்குமார், 12ம் தேதியன்று ஜீப்பில் ரோந்து பணி சென்றார்.



அப்போது இரு சக்கர வாகனத்துடன் சாலை ஓரத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அருண்குமார் ஜீப்பை நிறுத்திவிட்டு அவரிடம் விசாரிக்க இறங்கினார். அந்த நபர் சற்றும் எதிர்பாராத நேரத்தில், இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து அருண்குமாரை வெட்ட வந்தார்.


latest tamil news


முதலில் நிலைகுலைந்த அவர் சமயோசிதமாக அந்த நபரை கீழே தள்ளி, அவர் மீது அமர்ந்து பட்டாக்கத்தியை பிடுங்கினார். பின் அந்த ரவுடியை கைது செய்து அழைத்து சென்றார். இந்த காட்சி அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதை ஐ.பி.எஸ்., அதிகாரி ஸ்வாதி லக்ரா என்பவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, 'இவர் தான் நிஜ ஹீரோ' என, எஸ்.ஐ., அருண்குமாரை பாராட்டி உள்ளார்.



இந்த, 'வீடியோ' பல்வேறு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி, பலரது பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த சம்பவத்தில் அருண்குமாரின் கையில் ஏற்பட்ட வெட்டு காயத்துக்கு எட்டு தையல் போடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

நல்லவன் - chennai,இந்தியா
24-ஜூன்-202212:54:37 IST Report Abuse
நல்லவன் ஒண்ணுமே புரியல "வெட்ட வந்த ரவுடியை மடக்கிய எஸ்.ஐ.,: 'நிஜ ஹீரோ' என குவியும் பாராட்டு" - அப்போ வெட்ட வந்த ரவுடிதான் நிஜ வில்லன்னா. நான்கூட மக்களை ரவுடிகிட்ட இருந்தது காப்பாத்திட்டாருன்னு நெனச்சே.... போலீஸோட தற்காப்பு முயற்சிக்கு பாராட்டு...... இதுவே சாமானியன் செய்திருந்தால் - ஏதோ அவங்களுக்குள்ள பிரச்சனைன்னு போயிடுவேம்.
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
23-ஜூன்-202202:44:45 IST Report Abuse
BASKAR TETCHANA தமிழகத்திலேயும் இருக்கிறதே போலீஸ் திருடனை மடக்கி பிடிக்காமல் அவனுக்கு சல்யூட் அடிக்கின்றனர். இல்லை என்றல் நண்பர் சொன்னது போல் ஆரத்தழுவி வரவேற்கின்றனர்.
Rate this:
Cancel
thangam - bangalore,இந்தியா
22-ஜூன்-202200:09:34 IST Report Abuse
thangam அந்த கேரளா ரவுடி யை தமிழக அரசு ஆரத்தழுவி அன்புடன் வரவேற்கிறது. பரிசும் பாராட்டும் வீடும் பதவியும் நிச்சயம். பிரதமரை போட்டு தள்ளுவனையே ஆற தழுவிய அரசு உன்னை காய் விடாதடாஅ என் செல்வமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X