ராமர் கோவிலுக்கு நன்கொடை: திரும்பிய ரூ.22 கோடி 'செக்'

Updated : ஜூன் 22, 2022 | Added : ஜூன் 22, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
அயோத்தி :அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழங்கிய நன்கொடையில், 22 கோடி ரூபாய் மதிப்பிலான 'செக்'குகள் பல்வேறு காரணங்களால் வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கு ஏராளமானோர் நன்கொடை வழங்கி வருகின்றனர். அவற்றில், 22 கோடி ரூபாய்
ராமர் கோவில், நன்கொடை,ரூ22 கோடி செக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அயோத்தி :அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழங்கிய நன்கொடையில், 22 கோடி ரூபாய் மதிப்பிலான 'செக்'குகள் பல்வேறு காரணங்களால் வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.


உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கு ஏராளமானோர் நன்கொடை வழங்கி வருகின்றனர். அவற்றில், 22 கோடி ரூபாய் மதிப்பிலான செக்குகள், வங்கிகளால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.


latest tamil news


இது குறித்து ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேலாளர் பிரகாஷ் குப்தா கூறியதாவது: ராமர் கோவில் கட்ட இதுவரை, 3,400 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது; 74 பேர் 1 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கியுள்ளனர்; 123 பேர், 25 - 50 லட்சம் ரூபாய்; 1,428 பேர், 5 - 10 லட்சம் ரூபாய் வரை நன்கொடை தந்துள்ளனர். 31 ஆயிரத்து 663 பேர், 1 - 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளனர்.



அதேசமயம், 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் செக்குகள், வங்கிகளால் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளன. கையெழுத்து சரியில்லாதது, வங்கி கணக்கில் பணமில்லாதது போன்ற காரணங்களால் செக்குகளை பணமாக்க முடியவில்லை. எனினும், அக்குறைபாடுகளை நீக்கி, மீண்டும் செக்குகள் வங்கியில் 'டிபாசிட்' செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
22-ஜூன்-202210:49:18 IST Report Abuse
பாமரன் இந்த மாதிரி லேபிளுக்காக செக் குடுத்து போட்டோ ஷுட் நடத்தறவங்களைவிட தொலைதூரத்தில் இருந்துகிட்டு ஒட்டு போட, போராட, மீட்டிங்லாம் அட்டென்ட் பண்ணாமல் தார்மீகமா சவுண்டு மட்டுமே குடுக்கும் நம்ம தள பக்கோடாஸ் எவ்வளவோ மேல்... 🤣🤣
Rate this:
Cancel
22-ஜூன்-202208:59:59 IST Report Abuse
ஆரூர் ரங் செல்லாத ரூபாய்த் தாள்களை🤔 சாமி உண்டியலில் போடுவது பழைய முறை. செல்லாத செக் கொடுப்பது புதிய முறை.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-ஜூன்-202205:12:27 IST Report Abuse
Kasimani Baskaran சிறப்பு. எப்பொழுதும் இராமபிரானின் ஆசி இந்தியாவுக்கு உண்டு.
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
22-ஜூன்-202210:28:23 IST Report Abuse
Sidhaarthஅதனாலதான் பற்றி எரிகிறதோ இப்போது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X