வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 'டுவிட்டர்' நிறுவனத்தை, எலான் மஸ்க் வாங்குவதற்கான அனுமதியை வழங்கி உள்ளது, டுவிட்டர் நிர்வாக குழு.
உலகின் மிகப் பெரிய பணக்காரரும், 'டெஸ்லா' மின்சார கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 3.43 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அவர் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது, டுவிட்டர் நிர்வாக குழு.

இருப்பினும், டுவிட்டரில் உள்ள போலி கணக்குகளின் எண்ணிக்கை, அது குறிப்பிடும் 5 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும் என எலான் மஸ்க் கருதுகிறார். எனவே, அது சம்பந்தமான வெளிப்படையான கணக்கை தருமாறும்; இல்லை எனில், வாங்கும் முயற்சியை ரத்து செய்துவிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவை ஒருபுறம் இருப்பினும், டுவிட்டர் நிர்வாக குழு தன்னுடைய ஒப்புதலை வழங்கி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE