புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை சமீபத்தில் 13 ஆயிரத்தை கடந்தது. அதன்பிறகு ஓரிரு நாட்களாக சற்று குறைந்த நிலையில் இன்று (ஜூன் 23) மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்தது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,313 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,33,44,958 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 10,972 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,27,36,027 ஆனது. தற்போது 83,990 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கோவிட் காரணமாக 38 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,941 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 196.62 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 14,91,941 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE