சென்னை: சென்னையில் பருவநிலை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் மண்டல வாரியாக அதிகாரிகளை நியமனம் செய்யப்படுவார்கள். இதன்படி சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கும் 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மண்டலம் - அதிகாரிகள்
திருவெற்றியூர் - சரவண குமார் ஜவாத்
மணலி - கணேசன்
மாதவரம் -சந்தீப் நந்தூரி
தண்டையார்பேட்டை - வினய்
ராயபுரம்- விஜய கார்த்திகேயன்
திரு.வி.க., நகர்- ரன்ஜீத் சிங்
அம்பத்தூர் மண்டலம் - சுரேஷ் குமார்
அண்ணா நகர் - பழனிசாமி
தேனாம்பேட்டை- ராஜாமணி
கோடம்பாக்கம் - விஜயலட்சுமி
வளசரவாக்கம் - மணிகண்டன்
ஆலந்தூர்- நந்தகோபால்
அடையாறு- நிஷாந்த் கிருஷ்ணா
பெருங்குடி - ரவி சந்திரன்
சோழிங்கநல்லூர் - வீரராகவ ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.