சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 26 ம் தேதி) ஒரே நாளில் 1,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூன் 26) 25,821 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 624; செங்கல்பட்டு 241; திருவள்ளூர் 85,கோவை 104 , காஞ்சிபுரம் 49; திருநெல்வேலி 46; கன்னியாகுமரி 39;, திருச்சி 36 ; தூத்துக்குடி 30; சேலம் 23; தென்காசி 20; விருதுநகர் 17; ராணிப்பேட்டை, மதுரை 15; சிவகங்கை 13; ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பூர் 11; வேலுார் 10 ; பெரம்பலுார் 8, தஞ்சாவூர்,தேனி , நீலகிரி 7 ; கிருஷ்ணகிரி 6; திருவாரூர் 5; கடலுார் 4; நாமக்கல், அரியலுார், திண்டுக்கல், கரூர் 3; புதுக்கோட்டை,ராமநாதபுரம்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம் 2; தர்மபுரி, விழுப்புரம், திருப்பத்துாரில் தலா ஒருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதிப்பு எதுவுமில்லாமல் மொத்தம் 1,466 பேருக்கும் கேரளா மாநிலம் சென்று திரும்பிய இருவர் மற்றும் அமெரிக்கா 2; ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு சென்று திரும்பிய தலா ஒருவரையும் சேர்த்து 1,472 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,68,344 ஆக அதிகரித்துள்ளது. இன்று 691 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,22,860 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு என்பது ஒரு நாள் அதிகரிப்பு மறுநாள் குறைவு என மாறி மாறி வருகிறது. நேற்று (25 ம் தேதி) 607 ஆக இருந்த நிலையில் இன்று (26 ம் தேதி)சென்னையில் ஆக 624 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6,677 ல் இருந்து 7,458 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல்

