சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 29ம் தேதி) ஒரே நாளில் 1,827பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![]()
|
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூன் 29) 25,912 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 771; செங்கல்பட்டு 316; திருவள்ளூர் 134, கோவை 85; கன்னியாகுமரி 65; காஞ்சிபுரம் 57; திருச்சி 47 ; மதுரை, திருநெல்வேலி 34; தூத்துக்குடி 31,விருதுநகர் 29; சேலம் 25;ஈரோடு18; திருப்பூர் ,கிருஷ்ணகிரி 16; சிவகங்கை 15 ; விழுப்புரம் 14; ராணிப்பேட்டை 11; தேனி10; வேலுார், ராமநாதபுரம் , கடலூர் 9; திருவண்ணாமலை 8, திருவாரூர் 7; மயிலாடுதுறை, பெரம்பலூர் , திண்டுக்கல் 6; நாமக்கல், தஞ்சாவூர் 5; நாகப்பட்டினம், நீலகிரி 4; அரியலுார், தென்காசி 3; திருப்பத்துார்,கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை2; தர்மபுரி,கரூர் தலா ஒருவர் என மொத்தம் 1,827பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,73,116ஆக அதிகரித்துள்ளது. இன்று 764 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,25,057 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு என்பது ஒரு நாள் அதிகரிப்பு மறுநாள் குறைவு என மாறி மாறி வருகிறது. நேற்று (28 ம் தேதி)632 ஆக இருந்த நிலையில் இன்று (29 ம் தேதி)சென்னையில் 771ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 10,033 ஆக உள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல்
![]() ![]()
|
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement