வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூன் 30 ம் தேதி) ஒரே நாளில் 2,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூன் 30 ) 29,524 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 909; செங்கல்பட்டு 352; திருவள்ளூர் 100, கோவை 96; காஞ்சிபுரம் 71; திருச்சி 62 ; கன்னியாகுமரி 61; திருநெல்வேலி 46 ; மதுரை 41; தூத்துக்குடி 38, சேலம் 28; ராணிப்பேட்டை 22; விருதுநகர் 14 ; ஈரோடு, சிவகங்கை 24; திருப்பூர் 16; சிவகங்கை 15 ; விழுப்புரம் 18; தஞ்சாவூர், நாமக்கல் 12; வேலுார், பெரம்பலுார் 10; அரியலுார், கிருஷ்ணகிரி 9 ; திண்டுக்கல் 8; ராமநாதபுரம் , கடலூர் 9; நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார் 6; தேனி, திருப்பத்துார் 5; தர்மபுரி, நீலகிரி 4; ராமநாதபுரம், புதுக்கோட்டை 3; கரூர், திருவாரூர் 2; கள்ளக்குறிச்சி 1; என மொத்தம் 2,069 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,75,185 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,26,065 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு என்பது ஒரு நாள் அதிகரிப்பு மறுநாள் குறைவு என மாறி மாறி வருகிறது. நேற்று (29 ம் தேதி) 771 ஆக இருந்த நிலையில் இன்று (30 ம் தேதி)சென்னையில் 909 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,094 ஆக உள்ளது.
மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல்