சிறையில் அடித்தனர்  : மராத்தி நடிகை கண்ணீர்
சிறையில் அடித்தனர் : மராத்தி நடிகை கண்ணீர்

சிறையில் அடித்தனர் : மராத்தி நடிகை கண்ணீர்

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
மும்பை :''முந்தைய ஆட்சியில் என்னை சட்ட விரோதமாக சிறையில் வைத்து அடித்து, உதைத்தனர்,'' என, மராத்தி நடிகை கேதகி சிதலே கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.மஹராஷ்டிராவில் மராத்தி நடிகை கேதகி சிதலே, தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை முகநுாலில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து கேதகி சிதலே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒருமாத
சிறையில் அடித்தனர்  : மராத்தி நடிகை கண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை :''முந்தைய ஆட்சியில் என்னை சட்ட விரோதமாக சிறையில் வைத்து அடித்து, உதைத்தனர்,'' என, மராத்தி நடிகை கேதகி சிதலே கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மஹராஷ்டிராவில் மராத்தி நடிகை கேதகி சிதலே, தேசியவாத கட்சி தலைவர் சரத்பவார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை முகநுாலில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து கேதகி சிதலே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒருமாத சிறைவாசத்திற்குப் பின் சமீபத்தில் அவருக்கு ஜாமின் கிடைத்தது.


latest tamil news


சில தினங்களுக்கு முன் மஹராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மாறியதை அடுத்து, கேதகி சிதலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:எந்த தவறும் செய்யாத என்னை 'வாரன்ட்' இன்றி சட்ட விரோதமாக கைது செய்தனர். ஒரு மாதம் சிறையில் நான் துன்புறுத்தப்பட்டேன். என்னை அடித்து, உதைத்தனர். என் மீது கருப்பான விஷ மை வீசப்பட்டது. தற்போது ஒரு வழக்கில் ஜாமினில் வந்துள்ளேன். என் மீது பல பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (11)

Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-ஜூலை-202215:20:37 IST Report Abuse
Kasimani Baskaran காவல்த்துறை அர்நப்பை நடத்திய விதத்தை வைத்தே கூட சொல்லலாம் அவர்கள் காவல்த்துறையை ஏவல்த்துறையாக வைத்திருந்தார்கள்.
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
03-ஜூலை-202210:34:34 IST Report Abuse
ramesh வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் ஏன் இந்த அவதி படவேண்டும்
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
03-ஜூலை-202210:04:00 IST Report Abuse
தமிழன் இந்த அம்மனியோட சாபமோ என்னவோ, அங்கே ஆட்சி மாறிப்போச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X