உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ அனைவரின் மனதையும் உருகச் செய்துள்ளது.
3 சக்கர வாகனம் ஒன்றில் இரும்பு பொருட்களை ஏற்றிக் கொண்டு, கூலி தொழிலாளி ஒருவர் சாலையில் வெறும் காலுடன் நடந்து சென்றுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த காவலர் ஒருவர் அவருக்கு புதிய செருப்பு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட அந்த தொழிலாளி காவலருக்கு நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.
காவலரின் இந்த மனிதாபிமான செயல் நெட்டிசன்களின் மனதை உருகச் செய்துள்ளது. இதுவரை சுமார் 2 லட்சம் பார்வைகளை கடந்துள்ள இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் லைக்குகளையும், காவலரை பாராட்டி கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.