வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : மருத்துவமனையில் இருந்து திரும்பிய விஜயகாந்துக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் 70, பல ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவரது காலின் மூன்று விரல்கள் அகற்றப்பட்டன. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை முடிந்து, வீட்டிற்கு திரும்பினார்.அவருக்காக வீட்டிலேயே மருத்துவமனையில் உள்ளது போன்ற படுக்கை, ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவரது மனைவி பிரேமலதா கூறுகையில் ''விஜயகாந்த் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டு உள்ளது.அவ்வப்போது, மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. அவர் பழைய நிலைக்கு திரும்புவார். அவரது உடல்நிலை பற்றி பேசி பெரிதாக்க வேண்டாம்; எங்கள் நிலையை புரிந்து கொள்ளுங்கள்,'' என்றார்.
விஜயகாந்தை பார்க்க விரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தினமும் தொண்டர்கள் வருகின்றனர். அவரை பார்க்க அனுமதி அளிக்காததால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.