வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (ஜூலை 4 ம் தேதி) ஒரே நாளில் 2,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூலை 4 ) 30,545 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சென்னையில் 1,066; செங்கல்பட்டு 375; திருவள்ளூர் 135, கோவை 144; திருச்சி 102 ; திருநெல்வேலி 86 ;காஞ்சிபுரம் 79;கன்னியாகுமரி 78; தூத்துக்குடி 71, விருதுநகர் 50; மதுரை 51; சேலம் 40; ராணிப்பேட்டை 37; தென்காசி33; ஈரோடு 30 ;விழுப்புரம், திருவண்ணாமலை,விழுப்புரம் 26; நாமக்கல் 24; திருப்பூர் 20;கிருஷ்ணகிரி 19; பெரம்பலுார் 18, தஞ்சாவூர்17,கடலுார், சிவகங்கை15; புதுக்கோட்டை,கள்ளக்குறிச்சி 11; நீலகிரி 10; அரியலுார் 9; திருவாரூர்,திண்டுக்கல் 8, தர்மபுரி7,வேலுார் 6; ராமநாதபுரம், திருப்பத்துார் 5; நாகப்பட்டினம், கரூர்,தேனி 4;மயிலாடுதுறை 3; இத்துடன் ஓமன் மற்றும் ராஜஸ்தான் சென்று திரும்பிய தலா ஒருவரையும் சேர்த்து மொத்தம் 2,654 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,85,429 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,542 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,31,787 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து ஆயிரத்தை தாண்டியது. நேற்று (ஜூலை 3ம் தேதி ) 1,072 ஆக இருந்த நிலையில் இன்று (ஜூலை 4 ம் தேதி) சென்னையில் 1,066 ஆக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 15,616 ஆக உள்ளது.
மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியல்

