விசா மோசடி வழக்கு: கார்த்தி வீட்டில் மீண்டும் சோதனை

Updated : ஜூலை 09, 2022 | Added : ஜூலை 09, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை: சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி வீட்டில் உள்ள ஒரு அறையில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த
chidambaram, p.chidambaram, karthi, karthichidambaram, cbi, Raid, visa, chinese, fake,

சென்னை: சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி வீட்டில் உள்ள ஒரு அறையில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த மே மாதம் 18 ம் தேதி சோதனை நடத்தினர். இது தொடர்பாக கார்த்தியிடமும் நேரில் விசாரணை நடத்தினர்.


latest tamil news



இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி வீட்டில் உள்ள ஒரு அறையில் 6 பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த முறை சோதனை நடந்த போது, அந்த அறையில் உள்ள ஒரு பீரோவின் லண்டன் சென்ற சிதம்பரம் குடும்பத்தினரிடம் இருந்தது. தற்போது அவர்கள் வந்த பிறகு சாவியை பெற்று சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடந்த போது, சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகியோர் வீட்டில் இல்லை.

Advertisement




வாசகர் கருத்து (17)

M Ramachandran - Chennai,இந்தியா
10-ஜூலை-202200:45:26 IST Report Abuse
M  Ramachandran ஒரு சொல் வழக்கு உண்டு. எட்டு பிள்ளையய் வித்து ஒரு செட்டி பிள்ளையாய் வாங்கு என்று. அது தான் மணலாய் கயிறாக திருத்து பணம் சம்பாதித்தது. அதை காப்பற்ற குவித்தியாக செயல் படும் அப்பனும் உள்ளது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-ஜூலை-202223:12:53 IST Report Abuse
Kasimani Baskaran பீரோ சாவியை மறைத்து வைத்தால் ரைடு திரும்ப வராது... அப்பனைப்போலவே ஒரு மேதா விலாசம்.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
09-ஜூலை-202220:32:28 IST Report Abuse
S.Ganesan எத்தனை முறை வாய்தா , ஜாமீன் வாங்கினார்களோ அதற்கு சமமாக ரைடு நடக்குமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X