நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை மறக்கக்கூடாது: கவர்னர்

Updated : ஜூலை 10, 2022 | Added : ஜூலை 10, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
வேலூர்: 75வது சுதந்திர தின விழா கொண்டாடி வரும் வேளையில் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை மறக்காமல் நாம் கவுரவிக்க வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.வேலூர் கோட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழககவர்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி வேலூர் சிப்பா புரட்சி நினைவு தினம் விழாவில் பங்கேற்று, முன்னாள் படை வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட
கவர்னர்,ரவி, ஆர்என்ரவி, சிப்பாய் புரட்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வேலூர்: 75வது சுதந்திர தின விழா கொண்டாடி வரும் வேளையில் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை மறக்காமல் நாம் கவுரவிக்க வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.



வேலூர் கோட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழககவர்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி வேலூர் சிப்பா புரட்சி நினைவு தினம் விழாவில் பங்கேற்று, முன்னாள் படை வீரர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர் தம் குடும்பத்தார், என்சிசி மாணவர்கள் பொதுமக்களிடையே பேசினார்.



latest tamil news

கவர்னர் பேசியதாவது: தமிழ் பழமையான சக்தி வாழ்ந்த அழகான மொழி. தமிழர்களின் கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்கு தமிழகம் வகிக்கிறது.



வேலூர் கோட்டையில் நடந்த போராட்டத்தை ஆங்கிலேயர்கள் கலகம் என்று கூறுகின்றனர். ஆனால் இது புரட்சியாகும். வேலூர் சிப்பாய் புரட்சி இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் வித்தாகும். இப்போராட்டத்தில் இந்திய வீரர்கள் நூற்றுக்கானவர்கள் தன்னுடைய உயிரை தியாகம் செய்தனர். அவற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வருகின்ற 75வது சுதந்திர தினத்தன்று நாம் சுதந்திரத்துக்காக உயிர்நீத்த அனைவரையும் நினைத்து பார்க்க வேண்டும் .


latest tamil news



இந்தியா முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் இன்ப காலம் எனும் வளர்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இன்னும் 25 ஆண்டுகளுக்கு பின்பு 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது கல்வி பொருளாதாரம் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் நாம் வளர்ந்திருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும். அதற்காக பிரதமர் நரேந்திர மோடி திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.



நாம் கூர்ந்து நோக்கினால் இந்திய சமமாக வளராமல் ஏற்றத்தாழ்வுடன் வளர்ந்துள்ளது இது தமிழகத்திலும் உள்ளது. தமிழகத்தில் கல்வி பல மாவட்டங்களில் பின்தங்கியும் பல மாவட்டங்களில் வளர்ந்து உள்ளது. உலக நாடுகளின் இந்தியாவின் மீதான பார்வை முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. இந்தியாவை பொருளாதாரத்தில் சூப்பர் பவர் நாடாக வளர்ந்து வரும் நாடாக பிற நாடுகள் நம்மை பார்க்கின்றன. வேலூர் ஒரு வீர பூமி. ஒவ்வொரு நாடுகளுக்கும் பிரதமர் செல்லும் போது அங்கு அவர்கள் பிரதமரை வரவேற்கும் விதைத்து பார்க்கும்போது அனைவருக்கும் தெரியும். உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது மாறுபட்டுள்ளது.




latest tamil news


வேலூர் மாவட்டத்தில் இருந்து இந்தியாவின் ராணுவத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களை அர்ப்பணித்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வானமே எல்லை என்ற நிலை உள்ளது எனவே இளைஞர்கள் நாட்டிற்காக பாடுபட வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒவ்வொரு வீரர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.




சிப்பாய் புரட்சி நினைவு தினம்


ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1806ம் ஆண்டு மதராஸ் படைக்கு தளபதியாக இருந்த சர் ஜான் கிரேடேக் என்பவர் , வேலூர் கோடையில் இருந்த இந்திய சிப்பாய்களுக்கு பல்வேறு அடக்கு முறைகளை கையாண்டார். அதில் குறிப்பாக இந்திய சிப்பாய்கள் காதில் கடுக்கன் அணியக்கூடாது ,சமய சின்னங்களை உடலில் அணிய கூடாது,தாடியை அகற்றிவிட்டு மீசையை வைத்துக்கொள்ள வேண்டும். பசுந்தோளால் செய்யப்பட தொப்பிகளை அணிய வேண்டும், மதக்குறிகளை நெற்றியில் இடக் கூடாது. உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைகளை கொண்டு வந்தார். இதனால் இந்திய சிப்பாய்கள் மன உலச்சளுக்கு ஆளாக்கப்பட்டனர். இதன் காரணமாக ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டு வேலூர் கோட்டையில் 1806 ஆண்டு ஜூலை 10ம் நாள் நள்ளிரவில் ஆங்கிலேய வீரர்களை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.



அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட போரில் 900 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் இந்த கிளர்ச்சி நாடு முழுவதும் பரவியது ,வேலூர் கோட்டையில் ஏற்பட்ட, இந்த முதல் சிப்பாய் புரட்சியே, நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முதல் சம்பவம் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இச்சம்பவம் நினைவாக வேலூர் கோட்டை எதிரே 1998ம் ஆண்டு தமிழக அரசால் நினைவு தூண் அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் ஜூலை 10ம் நாள் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (21)

10-ஜூலை-202221:16:08 IST Report Abuse
அப்புசாமி இது மாதிரி விழாவுக்கு கூப்புட்டா தலைமை தாங்கி இது மாதிரி பேசுவாங்க. இறங்கிப் போனதும் இவிங்கதான் முதலில் மறப்பாங்க. அடுத்த விழாவிற்கு ஞாபகம் வந்துரும்.
Rate this:
Cancel
10-ஜூலை-202220:49:20 IST Report Abuse
அருணா மிசாவில் சென்றதையே செக்கிழுத்த செம்மல் ரேஞ்சிற்கு பதிவிட்ட மாடல் அரசை மறக்க முடியுமா ஜி
Rate this:
Cancel
10-ஜூலை-202220:06:14 IST Report Abuse
அப்புசாமி மறந்தாக்கூட பரவாயில்லை. சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை, நேரு போன்றவர்கள் நாட்டை குட்டிச்சுவராக்கிட்டாங்கன்னு திட்டுறாங்களே. அதான் கொடுமை.
Rate this:
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
10-ஜூலை-202221:34:23 IST Report Abuse
Davamani Arumuga Gounder.. ஏப்பா அப்பாசாமி.. சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரம் பிள்ளை, குஷ்டரோகம் பீடித்து வெளியில் வந்த சுப்ரமணிய சிவா போன்றவர்களை மறந்து விட்டு... மவுண்ட் பேட்டன் மனைவிக்கு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு.. ஆங்கில நாவல்கள் வாசித்துக்கொண்டும், டென்னிஸ், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளை விளையாடிக்கொண்டும், கடிதம் எழுதிக்கொண்டும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு இருப்பது போன்று ஜெயில் வாழ்க்கை வாழ்ந்த ஜவஹர்லால் உம் ஒன்றா? .. கொஞ்சாவது மனசாட்சியுடன் கருத்திட வேண்டாமா?ம...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X