சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் ஸ்டாலின் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து உடற்சோர்வு இருந்ததால், கடந்த 14ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், வேகமாக குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜூலை 18) டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், மேலும் ஒரு வார காலத்திற்கு வீட்டில் இருந்தபடி ஓய்வு எடுக்க இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.