அதிக இலவசங்களை அறிவித்த மாநிலங்கள்: பஞ்சாப் முதலிடம்

Updated : ஜூலை 17, 2022 | Added : ஜூலை 17, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
ரிசர்வ் வங்கி மாநிலங்களின் நிதிநிலைமைகளில் உள்ள அபாயங்களை ஆராய்ந்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில் 2022 - 23 நிதியாண்டில் இலவசங்களை அறிவித்துள்ள மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பஞ்சாப் முதலிடம், ஆந்திரா இரண்டாமிடம், ஜார்கண்ட் மூன்றாமிடம் பிடித்துள்ளது. தமிழகம் இடம்பெறவில்லை.ஆர்.பி.ஐ., தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தலைமைக்
Freebies, State_Finances, RBI_Report, Punjab

ரிசர்வ் வங்கி மாநிலங்களின் நிதிநிலைமைகளில் உள்ள அபாயங்களை ஆராய்ந்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில் 2022 - 23 நிதியாண்டில் இலவசங்களை அறிவித்துள்ள மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பஞ்சாப் முதலிடம், ஆந்திரா இரண்டாமிடம், ஜார்கண்ட் மூன்றாமிடம் பிடித்துள்ளது. தமிழகம் இடம்பெறவில்லை.

ஆர்.பி.ஐ., தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி.,) சமீபத்திய தரவுகளின்படி, மானியங்களுக்கான மாநில அரசுகளின் செலவு 2020 - 21ல் 12.9 சதவீதம் மற்றும் 2021 - 22ல் 11.2 சதவீதம் என வளர்ந்துள்ளது. இதற்கு இணையாக மாநிலங்களின் மொத்த வருவாய் செலவினங்களில் மானியங்களின் பங்கு 2019 நிதியாண்டில் 7.8 சதவீதமாக இருந்தது, 2021 நிதியாண்டில் 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. உதாரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் மானியங்கள் அதிக அளவில் உயர்ந்துள்ள முதல் ஐந்து மாநிலங்களாக ஜார்கண்ட், கேரளா, ஒடிசா, தெலுங்கானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை உள்ளன.


ரேஷன், கல்வி, சுகாதார திட்டங்கள் இலவசங்களல்ல!



latest tamil news

குஜராத், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் தங்கள் வருவாய் செலவினத்தில் 10 சதவீதத்திற்கு மேல் மானியங்களுக்காக செலவிடுகின்றன. மானியங்கள் பிற பயனுள்ள நோக்கங்களுக்கான பணத்தை வெளியேற்றுவதாக அறியப்படுகிறது. சமீப காலமாக, மாநில அரசுகள் தங்கள் மானியங்களில் ஒரு பகுதியை இலவசங்களாக வழங்கத் தொடங்கியுள்ளன. இலவசங்களுக்கு துல்லியமான வரையறை இல்லை என்றாலும், பொது விநியோக திட்டம், வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதார திட்டங்கள் போன்ற பொருளாதாரப் பலன் தருபவற்றை வேறுபடுத்திப் பார்ப்பது அவசியம்.


அதே சமயம், இலவச மின்சாரம், இலவச குடிநீர், இலவச பொது போக்குவரத்து, நிலுவையில் உள்ள விவசாய கடன்கள் போன்றவற்றை தள்ளுபடி செய்வது ஆகியவை பெரும்பாலும் இலவசங்களாக கருதப்படுகின்றன. இது கடன் திரும்பி வரும் என்ற நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யும். கிராஸ் சப்சிடைஷேசன் எனும் ஒன்றின் லாபத்தை எடுத்து மற்றொன்றுக்கு நிதியளித்து விலைகளை மாற்றுவதால் தனியார் முதலீட்டிற்கான ஊக்கம் குறையும். தற்போதைய ஊதிய விகிதத்தில் வேலையைத் தடுக்கும். இதனால் தொழிலாளர் பங்கேற்பு வீழ்ச்சியுறும்.


latest tamil news

சரியாக இலக்கு நிர்ணயித்தால் சில இலவசங்கள் ஏழைகளுக்குப் பயனளிக்கக் கூடும். ஆனால் அவற்றுக்கான பெரிய நிதி செலவுகளுடன் அவற்றின் நன்மைகளை மதிப்பீடு செய்ய வேண்டும். மேலும், இலவசமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குவது சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலை அழிவை துரிதப்படுத்துவதாக அறியப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் இலவசங்களின் மதிப்பீட்டை அறிய பட்ஜெட் உரை உட்பட பல்வேறு இடங்களிலிருந்து தகவல்களை திரட்டியதில், மாநிலங்களின் மொத்த உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி.,) இலவசங்களுக்கான செலவு 0.1 - 2.7 சதவிகிதம் வரை இருக்கிறது. ஆந்திரா மற்றும் பஞ்சாப் போன்ற அதிகக் கடனில் உள்ள சில மாநிலங்களில் இலவசங்களுக்கான செலவு ஜிஎஸ்டிபி.,யில் 2 சதவீதத்தைத் தாண்டியுள்ளன.


நிரந்தர அதிகாரம் பெறுவதை உறுதி செய்க!



இதனால் இலவசங்கள் வடிவில் உள்ள பல சமூக நலத் திட்டங்கள் மாநில கருவூலத்திற்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மேலும் சந்தையிலிருந்து கடன் வாங்கியிருந்தால் அதுவும் அழுத்தம் ஏற்படுத்தும். எனவே மாநில அரசுகள் இலவசங்களுக்கான செலவினை மறு பரிசீலனை செய்து, பயனாளிகள் நிரந்தரமாக அதிகாரம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். அதன் மூலம் நீண்ட கால நன்மைகளை அடைய முடியும்.


சமூக நலத் திட்டங்களுக்கு காலக்கெடு!



latest tamil news

ஒவ்வொரு சமூகத் துறை திட்டத்திற்கும் காலக்கெடு கொண்டு வருவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். தகுதியானவர்கள் மட்டுமே மானியங்களை வழங்கி, மானியங்களின் அளவை குறைக்க வேண்டும். அந்த பணத்தை கொண்டு சுகாதாரம், கல்வி, விவசாயம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கிராமப்புற உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீடு செய்யலாம். இது அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வறுமையை குறைக்கவும் உதவும். மானியங்களால் மின்சாரத் துறை தான் 40% அளவு கடனாளியாகியிருக்கிறது. தொடர்ந்து நீர்பாசனம், உள்கட்டமைப்பு மேம்பாடு, உணவு மற்றும் குடிநீர் விநியோகத் துறைகள் உள்ளன.


2022ல் அதிக இலவசங்களை அறிவித்த மாநிலங்கள்



பஞ்சாப் அதன் மாநில மொத்த உற்பத்தியில் 2.7 சதவீதம் அளவிற்கு இலவசங்களை அறிவித்துள்ளது. அதன் சொந்த வரி வருவாயில் இது 45.4 சதவீதம்.



ஆந்திரா அதன் மாநில மொத்த உற்பத்தியில் 2.1 சதவீதம் அளவிற்கு இலவசங்களை அறிவித்துள்ளது. அதன் சொந்த வரி வருவாயில் இது 30.3 சதவீதம்.

ஜார்கண்ட் அதன் மாநில மொத்த உற்பத்தியில் 1.7 சதவீதம் அளவிற்கு இலவசங்களை அறிவித்துள்ளது. அதன் சொந்த வரி வருவாயில் இது 26.7 சதவீதம். இவ்வாறு கூறியுள்ளது.

தற்போது மத்திய அரசு ஜூன் 2022 உடன் முடிந்த மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி., இழப்பீடு காலக்கட்டத்தை 2026 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதனால் மாநில கருவூலங்களுக்கான சுமை குறைந்துள்ளது. அதனை ஆக்கப்பூர்வமாக செலவிட்டால் மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் இருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (14)

17-ஜூலை-202222:45:15 IST Report Abuse
ஆரூர் ரங் அதான் இலவசம் ன்னு சொல்லாம விலையில்லா என அறிவிக்கிறார்களே. அப்போ இலவச அறிவிப்புகள்😉 குறைவாகவே தெரியும்
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
17-ஜூலை-202221:55:20 IST Report Abuse
rsudarsan lic ஹே ஹே ஹெஹ்ஹே ஹெஹ்ஹே. தமிழகம் இல்லையாம். அட்ராசக்க அட்ராசக்க
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
17-ஜூலை-202220:59:19 IST Report Abuse
Soumya நம்பிள் விடியல் ஐயா ரெம்ப கெட்டிக்காரர்ரூ தேர்தல் வாக்குறுதிகள் 504.அறிவித்தார் அது அவருக்கே ஞாபகமில்லையாம் அதனால் அப்பப்போ என்பது வீதம் வீதம் நிறைவேற்றிவிட்டேன் என்று புரூடா உடுவார் அடுத்த முறை விடியல் ஐயாவிடம் துண்டுசீட்டில் அணைத்து வாக்குறுதிகளையும் எழுதி குடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X