பசு கோமியம் லிட்டர் ரூ.4 : சத்தீஸ்கர் அரசு வாங்குகிறது| Dinamalar

பசு கோமியம் லிட்டர் ரூ.4 : சத்தீஸ்கர் அரசு வாங்குகிறது

Updated : ஜூலை 19, 2022 | Added : ஜூலை 19, 2022 | கருத்துகள் (45) | |
ராய்ப்பூர்: வரும் ஜூலை 28 ம் தேதி முதல் பசு கோமியத்தை லிட்டர் ரூ. 4 க்கு வாங்கும் திட்டம் துவங்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.சத்தீஸ்கரில், கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் கோதான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை
பசு கோமியம் லிட்டர் ரூ.4 : சத்தீஸ்கர் அரசு வாங்குகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ராய்ப்பூர்: வரும் ஜூலை 28 ம் தேதி முதல் பசு கோமியத்தை லிட்டர் ரூ. 4 க்கு வாங்கும் திட்டம் துவங்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.



சத்தீஸ்கரில், கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், கால்நடை வளர்ப்போரின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் கோதான் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் , கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை வளர்ப்போர்களிடம் இருந்து மாட்டு சாணம் வாங்கப்பட்டு வருகிறது.



latest tamil news

இந்நிலையில், இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக, உள்ளூர் பண்டிகையான 'ஹரேலி' திருவிழா நடக்கும் வரும் 28 ம் தேதி முதல், பசு கோமியத்தை லிட்டருக்கு 4 ரூபாய் என்ற அளவில் வாங்கும் திட்டம் துவங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் கால்நடைகள் வளர்ப்போர் தொடர்பான இரண்டு அமைப்புகள் மூலம் கோமியம் வாங்கப்படும்.


உள்ளூர் அளவில் கோமியத்திற்கான விலையை அந்த குழுக்களே நிர்ணயம் செய்யும். குறைந்த பட்சமாக ரூ.4 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். கோமியம் வாங்குவது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்தும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X