போதை கலாசாரத்தை தி.மு.க., வளர்க்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

Added : ஜூலை 23, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
சென்னை : 'போதை கலாசாரத்தை தி.மு.க., அரசு போற்றி வளர்க்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தின் பாதை போதை ஆகிறது. புத்தகப் பைகளை சுமக்க வேண்டிய கைகள், பொட்டலங்களை சுமக்கின்றன. கஞ்சா போதை அதிகரிப்பால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பாலியல் வன்முறைகளால் நெஞ்சு பதைக்கிறது. போதை கலாசாரத்தை தி.மு.க., அரசு போற்றி வளர்க்கிறது.
DMK, BJP, Annamalai

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

/
volume_up

சென்னை : 'போதை கலாசாரத்தை தி.மு.க., அரசு போற்றி வளர்க்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.



அவரது அறிக்கை: தமிழகத்தின் பாதை போதை ஆகிறது. புத்தகப் பைகளை சுமக்க வேண்டிய கைகள், பொட்டலங்களை சுமக்கின்றன. கஞ்சா போதை அதிகரிப்பால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பாலியல் வன்முறைகளால் நெஞ்சு பதைக்கிறது. போதை கலாசாரத்தை தி.மு.க., அரசு போற்றி வளர்க்கிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



latest tamil news

மேலும், தமிழக பா.ஜ., சார்பில், கஞ்சா போதையில் சமூக விரோதிகளால் நடந்துள்ள குற்ற செயல்கள், கஞ்சா புழக்கம் அதிகரிப்பிற்கான காரணங்களை விளக்கும் வீடியோ பதிவும் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
23-ஜூலை-202220:58:42 IST Report Abuse
Krishnamurthy Venkatesan தமிழ் நாட்டில் போதை பழக்கம் அதிகமாகிவிட்டது என சொன்னால், ஆந்திராவில் போதை இல்லையா? ஆஃப்ரிக்காவில் போதை இல்லையா? அமெரிக்காவில் போதை இல்லையா? என சொல்லி கவுன்டர் அட்டாக் பண்ணி விட்டோம் என்ற திருப்தி அடைந்து விடுகிறார்கள். ஒரு வருங்கால சந்ததி அதல பாதாளத்திற்கு போய் கொண்டிருக்கிறது என்ற கவலை சிறிதும் இல்லை.
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
23-ஜூலை-202220:33:34 IST Report Abuse
Tamilan அதிமுக அமைச்சர்களின் மீதுதான் இப்படி வழக்குகள் போடப்பட்டுள்ளது . இனியும் பிஜேபிக்காரர்கள் மீது போடப்படவில்லை . அதுவும் பிஜேபிக்காரர்களால் போடப்பட்டது . அதற்குள் இவருக்கு என் இவ்வளவு கோபம்?.
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
23-ஜூலை-202219:59:09 IST Report Abuse
TRUBOAT பாண்டிச்சேரி, கோவா, மகாராஷ்டிரா போன்ற நீங்கள் ஆளும் மாநிலங்களில் இல்லாத போதை பழக்கமா. இந்த பிரச்சினை நாட்டின் பிரச்சினை. இதை தடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன. பல ஆயிரம் கிலோ குஜராத்தில் பிடிபட்டது, அதற்க்கு யார் மீது நடவடிக்கை. பஞ்சாப், காஷ்மீர், ராஜஸ்தான், கர்நாடக. ஆந்திர, வட கிழக்கு மாநிலங்கள் அதிகம் பாதிக்க பட்டவை. மத்திய அரசு சட்டத்தை கடுமையாக்க வேண்டும். மலேஷியா போன்ற நாடுகளில் உள்ளது போல் மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் இங்கு மூன்று மாதத்தில் வெளியில் வந்து திரும்ப அதே வேலையை செஞ்சிகிட்டு இருப்பானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X