பயங்கரவாத குழுவுக்கு 'கிரிப்டோ கரன்சி'யில் நிதி!

Added : ஜூலை 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
பாட்னா : பீஹாரில், 'வாட்ஸ் ஆப்' குழு வாயிலாக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவருக்கு கத்தார் நாட்டில் இருந்து, 'கிரிப்டோ கரன்சி' வாயிலாக நிதி அளிக்கப்பட்டது தெரியவந்து உள்ளது.பீஹாரின், புல்வாரி ஷரீப் என்ற இடத்தை சேர்ந்தவர் மார்கவ் அகமது டானிஷ், 26. இவர், காஸ்வா - இ - ஹிந்த் மற்றும் 'டைரக்ட் ஜிகாத்' என்ற பெயரில், இரு 'வாட்ஸ் ஆப்' குழுக்களை நடத்தி வந்தார். இந்த
பயங்கரவாத குழுவுக்கு 'கிரிப்டோ கரன்சி'யில் நிதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா : பீஹாரில், 'வாட்ஸ் ஆப்' குழு வாயிலாக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவருக்கு கத்தார் நாட்டில் இருந்து, 'கிரிப்டோ கரன்சி' வாயிலாக நிதி அளிக்கப்பட்டது தெரியவந்து உள்ளது.

பீஹாரின், புல்வாரி ஷரீப் என்ற இடத்தை சேர்ந்தவர் மார்கவ் அகமது டானிஷ், 26. இவர், காஸ்வா - இ - ஹிந்த் மற்றும் 'டைரக்ட் ஜிகாத்' என்ற பெயரில், இரு 'வாட்ஸ் ஆப்' குழுக்களை நடத்தி வந்தார். இந்த குழு வாயிலாக, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பி வந்தார். இவரை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர்.


latest tamil news


இவரிடம் நடத்திய விசாரணையில், மேற்காசிய நாடான கத்தாரை சேர்ந்த அல்பால்ஹி என்ற அமைப்பிடம் இருந்து, 'கிரிப்டோ கரன்சி' வடிவத்தில் நிதி அளிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹரீக் - இ - லப்பாய்க் என்ற அடிப்படைவாத குழுவுடனும், பாக்.,கைச் சேர்ந்த பைஸான் என்பவருடனும் டானிஷ் நெருங்கிய தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Tamilan - NA,இந்தியா
25-ஜூலை-202208:15:29 IST Report Abuse
Tamilan இந்தியா, உலகின் முன்னணி நிறுவனங்களின் கருப்பு பணம் கிரிப்டோவில் இருக்கும். கிரிப்டோவின் மூலமாகவோ, நேரடியாகவோ அல்லது வேறு வழியிலோ இவையனைத்தும் பயங்கரவாதிகளுக்கு சென்று சேரும். இதையெல்லாம் அரசியல் சட்ட அரசுகளால் ஒன்றும் செய்ய முடியாது
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
25-ஜூலை-202208:12:13 IST Report Abuse
Tamilan உலகின் முன்னணி fortune 500 நிறுவனங்களிலிருந்தும், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களிலிருந்து தீவிரவாதிகளுக்கு பணம் போகவில்லை என்று எந்த கோர்ட்டுகளும் சர்டிபிகேட் கொடுக்கவில்லை. எந்த கம்பனிகளும் தங்கள் கூட்டங்களில் இப்படி கூறியதும் இல்லை.
Rate this:
Cancel
25-ஜூலை-202206:06:00 IST Report Abuse
ஷ்யாம் இந்த மாதிரி ஆட்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் இல்லையேல் இந்தியாவிற்கே ஆபத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X