ரூ.33 லட்சம் சம்பளம் கிடைத்தும் பணியில் சேர முடியாத 15 வயது சிறுவன்!

Added : ஜூலை 25, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
நாக்பூர் : நாக்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுவனை அமெரிக்க நிறுவனம் ஒன்று, 33 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு பணியமர்த்தியும், அவரால் பணியில் சேர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவன் வேதாந்த் தியோகேட், இணையதள வடிவமைப்பு தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட 'இன்ஸ்டாகிராம்' இணையதள
coding contest, US company,Vedant,website development, competition, Vedant Deokate

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாக்பூர் : நாக்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுவனை அமெரிக்க நிறுவனம் ஒன்று, 33 லட்ச ரூபாய் சம்பளத்துக்கு பணியமர்த்தியும், அவரால் பணியில் சேர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவன் வேதாந்த் தியோகேட், இணையதள வடிவமைப்பு தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட 'இன்ஸ்டாகிராம்' இணையதள வடிவமைப்புக்கான போட்டி குறித்த விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.இரண்டு நாட்களுக்குள் 2,000க்கும் மேற்பட்ட 'கம்ப்யூட்டர்' கோடுகளை எழுதி போட்டியில் பங்கேற்ற வேதாந்த், அதில் வென்றார்.


latest tamil news


1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் போட்டியில் வென்ற வேதாந்த்தை, அமெரிக்க நிறுவனம் தங்களது மனிதவள மேம்பாட்டுக் குழுவில், ஆண்டுக்கு 33 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்ற தேர்வு செய்தது. துரதிர்ஷ்டவசமாக வேதாந்துக்கு 15 வயதுதான் ஆகியுள்ளது என்பதை அறிந்த அந்நிறுவனம், வேலைவாய்ப்பை திரும்பப் பெற்றது.



இருப்பினும், அந்நிறுவனம் வெளியிட்ட செய்தியில், 'நம்பிக்கை இழக்க வேண்டாம். உங்கள் அனுபவம், தொழில்முறை மற்றும் அணுகுமுறை ஆகியவற்றால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். 'பள்ளிக் கல்வியை முடித்த பின் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்' என, வேதாந்திடம் உறுதி அளித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

25-ஜூலை-202213:00:45 IST Report Abuse
குமரன் நம்பிக்கையுடன் செயல்படுங்கள் வேதாந்த் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
25-ஜூலை-202208:18:58 IST Report Abuse
Tamilan பணியில் சேர முடியாதவர்களுக்கு எதற்க்காக வேலை கொடுத்தார்கள்? எதற்க்காக விஞ்சான வித்தை காட்டுகிறார்கள்? .
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-202207:25:14 IST Report Abuse
Kasimani Baskaran கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. பரவாயில்லை வயது ஒன்றும் ஆகிவிடவில்லை. நாலு ஆப் எழுதி வெளியிட்டால் போதுமானது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X