பெரம்பலூர்: அரியலூரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்த தகவலை அடுத்து புதுக்கோட்டை நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
மொத்தம் 7 பேர் கொண்ட குழு சோதனை அரியலூரை சேர்ந்தவர் தன்ராஜ் இவர்
புதுக்கோட்டையில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இன்று காலை அரியலூரில் உள்ள அவரது வீடு , கல்யாண மண்டபம், ஓடக்கார தெருவில் உள்ள இல்லம், பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூரில் உள்ள வீடுகளில் மொத்தம் 6 இடங்களில் 6 குழுக்களாக 40 லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து டிஎஸ்பி சந்திரசேகரிடம் கேட்ட போது வருமானத்திற்க்கு அதிகமாக சொத்து சேர்த்த தகவலில் சோதனை நடைபெற்று வருவதாக கூறினார்.