கோவிட்: இந்தியாவில் மேலும் 20,742 பேர் குணம்| Dinamalar

கோவிட்: இந்தியாவில் மேலும் 20,742 பேர் குணம்

Updated : ஜூலை 27, 2022 | Added : ஜூலை 27, 2022 | |
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,742 பேர் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,313 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,39,38,764 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 20,742 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில்
கோவிட்: இந்தியாவில் மேலும் 20,742 பேர் குணம்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,742 பேர் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.



இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,313 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,39,38,764 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில் 20,742 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,32,67,571 ஆனது. தற்போது 1,45,026 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



latest tamil news

கோவிட் காரணமாக 57 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,26,167 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 202.79 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 27,37,235 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X