மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் படிப்பு தானாக வரும்: முதல்வர்
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் படிப்பு தானாக வரும்: முதல்வர்

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் படிப்பு தானாக வரும்: முதல்வர்

Updated : ஜூலை 27, 2022 | Added : ஜூலை 27, 2022 | கருத்துகள் (50) | |
Advertisement
சென்னை: பள்ளிகள், மாணவர்களுக்கு அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகியவற்றை பலப்படுத்தும் விதமாக அமைய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால், படிப்பு தானாகவே வந்து விடும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு வழங்குவதற்காக 805 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். சென்னை அசோக் நகர் அரசு பெண்கள்
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் படிப்பு தானாக வரும்: முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: பள்ளிகள், மாணவர்களுக்கு அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகியவற்றை பலப்படுத்தும் விதமாக அமைய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால், படிப்பு தானாகவே வந்து விடும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.



பள்ளி மாணவர்களுக்கு மனநலம், உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு வழங்குவதற்காக 805 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் இந்த வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 27) கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனங்களில் உளவியல் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் இடம் பெறுவர். மருத்துவ குழுவினர் பள்ளிக்கு நேரில் சென்று விழிப்புணர்வு வழங்குவர். முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மாணவர்களுடன் கலந்து உரையாடிய போது, மாணவர்களிடம் சாப்பிட்டீர்களா என கேட்டேன். சிலர் சாப்பிடவில்லை என்று கூறினர். மாணவர்களே, காலை உணவை தவற விடாதீர்கள்.



latest tamil news

எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். மாணவர்களின் முகங்களை பார்க்கும் போது தான் நலம் பெறுகிறேன். பள்ளிகள் மதிப்பெண் பெறும் கூடமாக இருக்கக் கூடாது. மாணவர்களுக்கு அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகியவற்றை பலப்படுத்தும் விதமாக அமைய வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால், படிப்பு தானாகவே வந்து விடும். காலை சிற்றுண்டி திட்டத்திற்கு நேற்று தான் கையெழுத்திட்டேன். அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி இலவசமாக வழங்கபடும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (50)

BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
28-ஜூலை-202202:26:54 IST Report Abuse
BASKAR TETCHANA மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது நல்ல விஷயம் தான் பாராட்டுவோம். அதற்காக தரமான சாப்பாடு வழங்க வேண்டும். காலை சாப்பாட்டில் எதையும் கலந்து கொடுத்து பிள்ளைகளை மருத்துவ மனையில் சேர்க்காமல் இருந்தால் சரி. என் என்றால் இந்த சுகாதார துறையை நம்பமுடியாது. ஏதாவது அசம்பாவம் நடக்காமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
27-ஜூலை-202219:58:21 IST Report Abuse
Ashok Subramaniam அசுர அதிகார, பண பலத்தோடு வளர்ந்தாலும், அதிகார போதையிலும் தன்னை அசைக்க முடியாது என்கிற ஆணவத்தாலும், தற்குறிகளுக்கு தன்னம்பிக்கை வருவதுண்டு. அது அவருக்கே தெரியும்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
27-ஜூலை-202217:17:41 IST Report Abuse
DVRR மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் படிப்பு தானாக வரும்: ஐ ஏ எஸ் ........எஞ்சினீர் டாக்டர் சைன்டிஸ்ட் ஆகலாம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இல்லையென்ரால் படிப்பு வராது என்னை போல அப்போது நீங்கள் முதல்வராகலாம் என்னைப்போல - என்று துண்டுசீட்டு பார்க்காமல் சொல்லிக்கொள்கின்றேன் - இப்படிக்கு ஸ்டாலின்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X