அவனியாபுரம் : ''பிரதமர் மோடிக்கு உண்டான மரியாதையைமுதல்வர் ஸ்டாலின் கொடுக்கிறார்,'' எனமதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க.,பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி.,யை அதிகரித்தது குறித்து விவாதம் செய்ய மத்திய அரசு பார்லிமென்டில் முன்வர தயாராக இல்லை. மின் கட்டண உயர்வு அறிவிப்பு வரட்டும் பின்பு கூறுகிறேன், என்றார்.
செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடி புகைப்படத்தின் மேல் கருப்பு மை பூசியவர்கைது குறித்த கேள்விக்கு, இது எங்காவது ஒரு இடத்தில் நடந்திருக்கும். பிரதமருக்கு உண்டான மரியாதை அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் கொடுக்கிறார். எங்கேயோ நடந்த ஒரு சம்பவத்தை வைத்து முடிவுக்கு வரக்கூடாது என்றார்.