கறுப்பு பணம் எப்படி உலவுகிறது?: கனிமொழி கேள்விக்கு பா.ஜ.,வின் பதில்!

Updated : ஆக 04, 2022 | Added : ஆக 04, 2022 | கருத்துகள் (68) | |
Advertisement
சென்னை-'தி.மு.க., - எம்.பி., கனிமொழி, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு முதல் முயற்சியாக, மது ஆலை மற்றும் டாஸ்மாக்கில் நடக்கும் ஊழலை ஒழிக்க புறப்படட்டும்' என, தமிழக பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பண மதிப்பிழப்பை அமல்படுத்திய பின், கறுப்பு பணமே இல்லாமல் ஆகிவிடும் என அறிவித்தனர். ரூ.5,400 கோடி அதன்பிறகும் நாட்டில் கறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'தி.மு.க., - எம்.பி., கனிமொழி, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு முதல் முயற்சியாக, மது ஆலை மற்றும் டாஸ்மாக்கில் நடக்கும் ஊழலை ஒழிக்க புறப்படட்டும்' என, தமிழக பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பண மதிப்பிழப்பை அமல்படுத்திய பின், கறுப்பு பணமே இல்லாமல் ஆகிவிடும் என அறிவித்தனர்.



latest tamil news


ரூ.5,400 கோடி



அதன்பிறகும் நாட்டில் கறுப்பு பணம் எப்படி உலவுகிறது என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி, பார்லி மென்டில் கேள்வி எழுப்பிஉள்ளார்.'எங்கும் ஊழல், எதிலும் ஊழல்' என்ற திராவிட மாடல் ஆட்சியால் தான், கறுப்பு பணம் உலவுகிறது.தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளில் விற்கும், ஒவ்வொரு பாட்டிலுக்கும், 10 முதல் 20 ரூபாய் கூடுதலாக, 'குடி'மகன்களிடம் இருந்து பெறப்படுகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது, ஒரு கோடி பாட்டில்கள் விற்பனையாகின்றன. அதன்படி ஒரு நாளைக்கு 'குடி'மகன்களிடம் இருந்து, 15 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆண்டுக்கு, 5,400 கோடி ரூபாய். இதுவே கறுப்பு பணம்.



latest tamil news


பதுக்கல்



மேலும், பயன்படுத்திய பாட்டில்கள் வழியே, பல ஆயிரம் கோடி ரூபாய் கறுப்பு பணம் உலவுகிறது.தமிழக நிதி அமைச்சர் மார்ச் மாதத்தில் கூறியபடி, 50 சதவீதம் மது விற்பனை, கலால் வரி இல்லாமல் நடக்கிறது என்றால், 33 ஆயிரம் கோடி வருவாய், கணக்கில் வராமல் பதுக்கப்படுகிறது.அப்படியானால், மது நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய்க்கு, கணக்கில் வராத வர்த்தகத்தை மேற்கொண்டுஉள்ளனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தி.மு.க.,வினர் நடத்தும், மது ஆலைகளை மூடிவிடுவோம் என, கனிமொழி கூறினார். அதன்படி செய்யாவிட்டாலும், குறைந்தது அந்த ஆலைகளை, கலால் வரி செலுத்தி, அரசுக்கு வருவாயை பெருக்க சொல்வாரா?இதுவே, நாட்டில் கறுப்பு பணம் எப்படி உலவுகிறது என, கனிமொழி கேட்ட கேள்விக்கு, பா.ஜ., அளிக்கும் பதில்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (68)

Nabhan - Trichy,இந்தியா
05-ஆக-202210:54:55 IST Report Abuse
Nabhan Scientific corruption party is the basic name of the party. They are talking about blackmoney. What a tragedy?
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
04-ஆக-202222:12:15 IST Report Abuse
adalarasan மது ஆலைகளின் சொந்தக்காரர்களையுடைய லிஸ்டாயும் கொஞ்சம் போட்டா சரியாரிக்கும்?50 வருடங்களுக்கு இவர்களே இந்த மது விற்பனையில் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள் என்பதையும் விளக்க வேண்டும்?
Rate this:
Cancel
thiagarajan -  ( Posted via: Dinamalar Android App )
04-ஆக-202221:47:37 IST Report Abuse
thiagarajan யாரெல்லாம் கேள்வி கேட்கலாம் என்ற விவஸ்தையே கிடையாதா ? சே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X