மயிலாடுதுறை;பூம்புகார் மீனவ கிராமத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுமார் 1000பேர் பா.ஜக.வில் மாவட்ட தலைவர் அகோரம் முன்னிலையில் இணைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் மீனவ கிராமத்தில் வசிக்கும் மீனவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பா.ஜ.கவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவரும், ஊராட்சி மன்றத்தலைவருமான அகோரம் தலைமை வகித்தார். முன்னாள் கிராம பொறுப்பாளர்கள் தெட்சிணாமுர்த்தி, கலியபெருமாள், பிச்சைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பா.ஜ.க ஒன்றிய தலைவர் முருகையன் வரவேற்றார்.
கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்டத்தலைவர் அகோரம் பொன்னாடைகள் அணிவித்து பேசினார். அப்போது அவர் பாரத பிரதமர் நரேந்திரமோடி மீனவர்களின் நலனின் மிகுந்த அக்கறை கொண்டு விளங்கிவருகிறார். பூம்புகார் மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிய விரைவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், முருகன் உள்ளிட்டோர் பூம்புகாருக்கு வருகை தர உள்ளனர்.
75வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள் தோறும் தேசியகொடிகள் ஏற்றிட வேண்டும் என கூறினார். அவருடன் மாவட்ட பொதுசெயலாளர் பாலாஜி குருக்கள், பொருளாளர் மணிசெல்வம் உள்ளிட்;ட கட்சி நிர்வாகிள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பா.ஜ.கதலைவர் விக்னேஷ் நன்றி கூறினார். மாவட்டத்தில் முதன்முறையாக மீனவர்கள் அதிக எண்ணிக்கைகள் பாஜகவில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது