புதுடில்லி:நடப்பாண்டில், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இந்தியாவில் '5ஜி' ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது, 'சாம்சங்' நிறுவனம்.
இந்தியாவின் 5ஜி ஸ்மார்ட்போன் சந்தையில், 28 சதவீத பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது இந்நிறுவனம் என, 'சைபர் மீடியா ரிசர்ச்' அறிக்கை தெரிவித்துள்ளது.அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
இந்திய ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையில், ஜூன் காலாண்டில் முதலிடத்தை பிடித்துள்ளது, சீன நிறுவனமான 'ஷாவ்மி' இதன் விற்பனையில் 22 சதவீத சரிவு ஏற்பட்டுள்ள போதிலும்; 20 சதவீத சந்தை பங்களிப்புடன், முதல் இடத்தில் உள்ளது.இரண்டாவது இடத்தில் 18 சதவீத பங்களிப்புடன், கொரிய நிறுவனமான சாம்சங் உள்ளது. இருப்பினும், 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடத்தை இந்நிறுவனம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், 50 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் ரூபாய் வரை விலையிலான 'சூப்பர் பிரீமியம்' பிரிவில் 'ஆப்பிள்' நிறுவனம் 78 சதவீத பங்களிப்புடன், முதலிடத்தில் உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், இதன் விற்பனை வளர்ச்சிக்கு 'ஐபோன் 12' மற்றும் 'ஐபோன் 13' வரிசை போன்கள் விற்பனை உதவி செய்துள்ளது.
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையில், மூன்றாவதுஇடத்தை 'ரியல்மி' நிறுவனமும், அடுத்த இடங்களை, 'விவோ, ஓபோ' ஆகிய நிறுவனங்களும் பிடித்துள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.