மணலி :கர்நாடகாவில் இருந்து, 29 டன் 'ஸ்டீல் காயில்'களுடன் சென்ற லோடு லாரி, சென்னை மணலி பகுதிக்கு வந்தது. அந்த லாரியில் இருந்த ஜி.பி.ஆர்.எஸ்., கருவி வேலை செய்யவில்லை. இதனால், அதன் உரிமையாளர் ரவி குமார் என்பவர், மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணையில், லாரியின் ஜி.பி.ஆர்.எஸ்., கருவி காட்டூர் பகுதி வரை செயல்பட்டு, அதன் பின் செயலிழந்தது தெரியவந்தது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை வைத்து, லாரியை கண்டுபிடித்தனர். அங்குள்ள ஒரு குடோனில் லாரியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.அதில் இருந்த ஸ்டீல் காயில்களை, 12 லட்சத்திற்கு விலை பேசி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக, திருவேற்காடு, தேவி நகரைச் சேர்ந்த, பா.ஜ., கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாநில செயற்குழு உறுப்பினர் பாரதிராஜா, 43; செங்குன்றம் பாடிய நல்லுாரைச் சேர்ந்த சுரேஷ்குமார், 36; புது நகரைச் சேர்ந்த மணிகண்டன், 37; எம்.ஏ.நகரைச் சேர்ந்த சந்தோஷ், 34, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், லாரி டிரைவர் செல்வம் வாயிலாக, பாரதிராஜா லாரியை கடத்தி, ஸ்டீல் காயில்களை திருடி, விற்றது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த செல்வத்தை தேடி வருகின்றனர்.